தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 16 - தனுசஜ்ஜீ
கதிர் மின்னல் வேகத்தில் டிப்டாப்பாக கிளம்பி கார்த்திக் முன் வந்து நின்றான்.
என்னடா மச்சான் என்ன நடக்குது.
கதிர் ஈஈஈஈஈ...... என்று இளித்துக்கொண்டு கார்த்திக்கிடம் ஒரு பேப்பரை கொடுத்தான்.
கார்த்திக் அதனை திறந்து பார்த்து கதிரை பொசுக்கி விடுவது போல முறைத்தான்.
(ஏன்னா அது லீவ் லெட்டர்.
I am Suffering From Love. So I can't continue My Job. I want one week Leave. Thanking you)
இப்படி தான் அந்த லெட்டர் இருந்தது. அதை பார்த்து தான் கார்த்திக் காண்டாயிட்டான்.🤭🤭🤭
மச்சான் நீ மாறுவனு நினைச்சேன். ஆனா இப்படி மாறுவனு தெரியாம போச்சே டா.
அதுக்கும் கதிர் ஈஈஈ.... என்று இளித்துக் கொண்டே சரி மச்சி கம்பெனிய பத்திரமா பார்த்துக்கோ..... ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் கால் பண்ணு ஏன்னா அங்க போய்ட்டா ஐயா ரொம்ப பிஸி ஆயிடுவாரு அதான் சொல்றேன் மச்சி ஓகேவா....
டேய் என்னால இதுக்கு மேல தாங்கமுடியாது. தயவு செஞ்சு போய் தொல....
மச்சான் என்ன ஆசிர்வாதம் பண்ணி அனுப்புடா முதல் தடவை என் மாமனார் வீட்டுக்கு போறேன்.
மச்சி ஏ கடுப்ப கௌப்பாம ஒழுங்கு மரியாதையா ஓடிடு.
சரி மச்சான் நீ ஏதே அப்செட் - ல இருக்க போல, நான் போயிட்டு வரேன். பாய்.... டாடா ......என்று கதிர் வண்டியை கிளப்பி சென்று விட்டான்.
எப்படிதான் ஃபிகர பாத்த உடனே ஃபிரெண்ட கலட்டி விடுறானுங்களோ.... என்று கார்த்திக்கும் புலம்பிக்கொண்டே அவன் உறக்கத்தை தொடர்ந்தான்.
கதிரின் வண்டி சீரிப்பாய அனிதா வீட்டை அடைந்தான்.
அங்கு அனைவரும் கிளம்பி இவனது வருகைக்காக காத்திருந்தனர். அனிதா மட்டும் கடுகடு முகத்துடன் இருந்தாள்.
வண்டியை விட்டு இறங்கிய உடன் கதிர் கண்டது அந்த கடுகடுவென்று இருந்த முகத்தை தான் அப்போதும் இவனது முகம் புன்னகை முகமாகவே இருந்தது.
வாங்க மாப்ள எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா அதுக்குள்ள பரவாலயே என்று அனிதாவின் அப்பா கேட்க.....
எல்லா ரெடி அங்கிள் வாங்க நம்ம கார்லயே போயிடலாம்.
அனிதா: அப்பா டாக்ஸி 5 நிமிஷத்துல வந்துரும் புக் பண்ணிட்டேன்.
டாக்ஸியா ஏன் அங்கிள் நான் தான் வரேனு சொன்னேனே.....