வசதியா இல்லையாம் இங்க உட்காந்துகுரேன்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கு ஓகே தான என்று கேட்க கதிர் அனிதா முகத்தை பார்த்தான். அவள் குனிந்து கொண்டிருந்தாள். அவளை வம்பிழுப்பதற்காக கயலை நோக்கி, அப்படியா கயல் நீ இருந்தா ஜாலியா சிரிச்சிட்டே பேசுவன்னு நினைச்சேன். என்று அனிதாவை ஓரவிழியால் பார்த்துக் கொண்டே கூறிவிட்டு, சரி அவுங்களையே உட்கார சொல்லு என்று அவன் சலிப்புடன் கூறினான்.
அவன் கூறியதும் நிமிர்ந்து அவனை முறைத்தவள். யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
உட்காருங்க மேடம் என்று அவன் கதவை திறந்து விட,
கடுகடு முகத்துடனே ஏறியவள். ஜன்னல் பக்கமாக திரும்பி கொண்டாள்.
கதிர் வாய் வரை வந்த சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்து, திரும்பி அசோக்கை பார்த்து கட்டை விரலை உயர்த்தினான்.பதிலுக்கும் அசோக்கும் கட்டை விரலை உயர்த்த இரு வண்டியும் சாலையில் சீறிப் பாய்ந்தது.
அரை மணி நேரம் வரை பார்த்தவன். அவள் அந்தப் புறமே திரும்பி இருக்க....
அனிதா ஒரு சைடா பார்க்காதிங்க... கழுத்து சுளுக்கிக்கும் என்று அனைவரது முன்பும் அக்கரையாக கூறுபவன் போல் கூறிவிட்டு எதுவும் நடவாதது போல வண்டியை ஓட்டிச் சென்றான்.
அனிதாவும் வேறுவழியில்லாமல் முகத்தை திருப்பி நேராக பார்த்தாள். இவர்களது பயணம் இப்படியே அமைதியாக செல்ல மதிய நேரமும் வந்தது. பின் சீட்டில் இருந்த அனைவரும் தூங்கியபடி வர அனைவரையும் ஒரு முறை முன்கண்ணாடியில் பார்த்தவன். திரும்பி அனிதாவை பார்த்தான். அவளும் லேசாக கண் அயர்ந்து விட்டாள்.
அவளது வலதுகை சீட்டின் மேல் இருந்தது. அதனை கண்டவன் அவளது வலக்கை மீது தன் இடக்கையை வைக்க.....அதில் அனிதாவின் உறக்கம் கலைந்தது. அவனது செய்கையை கண்டவள். வெடுக்கென்று தன் கையை உருவிக்கொண்டாள்.
அதனை கண்டவனின் உதடுகள் அழகாக விரிந்தது. ஒரு புருவத்தை மட்டும் அழகாக தூக்கி இறக்கி கண்ணடித்தான்.
அதை கண்டவள் அவனை அலட்சியமாக பார்த்து உதட்டை சுருக்கி திரும்பிக் கொண்டாள்.
அதில் கடுப்பானவன். வண்டியை ஓரமாக நிறுத்தி, அவளது முகத்தை அழுத்தமாக பிடித்து திருப்பினான். அவள் வலியில் முகத்தை சுருக்க.....
என்னடி ஓவரா பண்ற..... என்ன பத்தி உனக்கு தெரியும்ல..... இன்னும் அந்த பழைய