ஓரமாக அமர்ந்து கதிரை கெத்தாக ஒரு பார்வை பார்க்க......
கதிர் அதை எல்லாம் கவனிக்காமல் அசோக்கின் தங்கையுடைய கைப்பிடித்து முன் சீட்டில் அவனுக்கு அருகே அமர வைத்து அவளிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டு இருந்தான்.
இதனைக்கண்ட அனிதாவின் கண்கள் தீப்பிழம்பாக மாறியது. அவளுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்தால் அந்த வண்டி எரிந்து இருக்கும் அந்த அளவு அவளது பார்வை உக்கிரமாக இருந்தது.
கதிர்வேறு கயல்விழிக்கு சீட்பெல்ட் போடுவதற்கு உதவிக் கொண்டிருந்தான்.
அதனைக் கண்டு பொங்கி சடாரென்று கதவைத் திறக்க..... அவள் திறந்த சத்தத்தில் அனைவரும் அவளையே நோக்கினர். அனைவரது பார்வையையும் உணர்ந்தவள்.
அந்த இடத்தில என்னால உட்கார முடியல கை வைக்க கஷ்டமாயிருக்கு என்று முகத்தை சுருக்கி வலிப்பது போல் கட்டுப் போட்ட கையை காட்டி அனைவரையும் திசைதிருப்பி விட்டாள்.
அவள் கூறியதை ஆமோதித்தவர்கள். சரிமா உனக்கு எங்க வசதியா இருக்கோ.... அங்கயே நீ உட்கார்ந்துக்கோ என்று கூறிவிட்டனர்.
அவர்கள் அப்படிக் கூறியதும் எப்படி அங்கு போய் அமர்வது என்று தெரியாமல் தயங்கியவள். அசோக்கை பார்த்தாள். அவன் இவளை கண்டு கொள்ளாமல் லக்கேஜை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டிருந்தான். சரியென்று கயல் இங்கே வா என்று அவளை அழைக்க.....
என்னக்கா என்று அவள் வண்டியில் அமர்ந்தபடியே தலையை நீட்டி கேட்டாள்.
இங்க கொஞ்சம் வாடா.....
இதோ வரேன்க்கா என்று அவள் எழ முயற்ச்சிக்க..... உடனே கதிர் வெயிட் கயல் என்று கூறி சீட் பெல்ட்டை கழட்டி விட்டான். அதில் மேலும் கடுப்பானவள் பல்லை கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
என்னாச்சு கா என்று கயல் அக்கறையுடன் கேட்க.....
இல்லடா அக்காவுக்கு இங்க கம்பர்ட்டபுலா இல்ல நீ உட்கார்ந்திருந்த சீட் எனக்கு கம்பர்டபுடலா இருக்கும். நான் அங்க உக்காந்துக்கவா என்று கேட்க....
ம்ம் சரிக்கா.....நீ அங்கேயே உட்கார்ந்துக்கோ....
நீ வந்து சொல்லியிரு கயல் நான் அவுங்ககிட்ட பேசறது இல்ல.
அந்த அண்ணா ஒன்னும் சொல்லமாட்டாங்க.... நீ போய் உட்கார்ந்துகோக்கா..
இல்லமா ப்ளீஸ்....
சரி வா என்று அனிதாவை அழைத்து சென்றவள். கதிரிடம் அண்ணா இவங்களுக்கு அங்க