கூறியதைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தாள்.
வீட்டுக்கு வந்த ரம்யாவிற்கு, தனது ரேகைகளில் மாற்றம் செய்ய முடியாது அவள் சொன்னது போல் ரேகையில் தெரியலாம். ஆனால் வேறு வழியில் தன் உடலில் அவனின் பெயரின் தடத்தைப் பதித்துக் கொள்ள முடியும் எனத் தோன்றியது. கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் தான் என்றாலும் காதலில் கண்மூடித்தனமாக இருந்தவளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. மெழுகினால் கையில் டி,ஹெச் (DH) என்ற எழுத்துக்களை வித்தியாசமான உருவில் டிசைன் எழுத்துக்களில் கையில் தீயின் பிழம்பால் எழுதினாள். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அந்த எழுத்துக்களைப் புரிந்துகொள்ள முடியும், இல்லையென்றால் எளிதில் பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாது.மறுநாள் காலை அம்மா அந்த தீக்காயத்தைக் கண்டுப் பதறவும், கொசுவர்த்திச் சுருளில் கையை வைத்தவாறே அயர்ந்து தூங்கிவிட்டதாகக் கூறினாள். இப்படியா ரம்யா கை சூடுபட்டுப் பொசுங்கறது கூட உணர்வில்லாம தூங்குவ. தூங்கினியா இல்லை மயக்கத்துல இருந்தியா இப்படி சூடுபட்டிருக்கு. உங்க அப்பா பார்த்தா என்னவோ நான் உன்னை சமைக்க சொல்லி அதனால் உன் கைல சூடுபட்டிடுச்சுன்ன்னு நினைச்சுத் திட்டப் போறாரு. முதலில் அது மேல கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யைப் போடு! இல்ல, இல்ல, பெட்ரோலியம் ஜெல்லி தடவு என்று அம்மா சொல்ல, சரி என்று சொன்னவள் ஆனால் கையில் எதுவும் தடவிக் கொள்ளாமல் காயத்தோடு விட்டுவிட்டு அப்படியே கல்லூரிக்குக் கிளம்பினாள். தேவியும் கையைக் கண்டு என்னாச்சு என்று கேட்க, அவளிடம் உண்மையைச் சொன்னாள். ரேகையில் எந்த எழுத்தும் தெரியட்டும், என் கணவன் பெயர் தினேஷ் தான், அதற்குத் தான் என்றும் அழியாத தழும்பு வர்ற மாதிரி நானே சூடு போட்டுகிட்டேன் என்று ரம்யா சொல்ல, தேவிக்கு ஆத்திரமாக வந்தது. ரம்யா ஏண்டி இப்படி பைத்தியக்காரி மாதிரி ஒவ்வொண்ணா பண்ணிட்டு இருக்க, ப்ளீஸ்டி, எப்பவுமே நான் உன்கிட்ட சொல்றமாதிரி காதலில் கண்மூடித்தனமாக இருக்காத, அவன் சர்ட்டை ஷேர் பண்ற, கர்சீப்பை ஷேர் பண்ற, இதெல்லாம் சரியில்ல, உங்க அன்பை விடு, ஹெல்த் அண்ட் ஹைஜீன் பாய்ன்ட்லயாவது யோசிச்சுப் பாரு. எப்பப் பார்த்தாலும் முட்டாள்தனமா எதாச்சும் பண்ணிட்டே இருக்க என்று தேவி சொல்லிக்கொண்டே போக, ரம்யாவின் காதுகளில் அவள் சொன்ன வார்த்தைகள் எதுவும் ஏறியதாகத் தெரியவில்லை.
மதியம் ரம்யாவின் வகுப்பிற்கு வந்த தினேஷ் கையில் என்ன என்றான், “dh டி ஹெச்” என்றாள். அப்படினா என்றவனிடம், (dear husband) டியர் ஹஸ்பன்ட்க்கு ஷார்ட் பார்ம் என்றாள் ரம்யா.
முறைத்தவனிடம், “தினேஷ் உனக்குத் தெரியாதா, உன் பேர் தான், இந்த காயம் தர்ற தழும்பு போல உன்னோட தடம் என்னை விட்டு எப்பவுமே அழியக் கூடாதுன்னு இப்படிப் பண்ணிக்கிட்டேன்!”
பைத்தியமா உனக்கு என்றான் தினேஷ் கோபமாக