(Reading time: 15 - 30 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவரருகில் சென்று அவரை தன் அருகில் இழுத்து மென்மையாக அணைத்துக் கொண்டார் "எதுக்குடா மன்னிப்பெல்லாம்,  அவன் நம்ம மகன், எல்லாம் சரி ஆகிடும் கவலபடாத என் தங்கம்" என்று கூறி அவரை உச்சி முகர்ந்தார்.

அவர் அனைப்பில், நிக்கத்தின் மனம் லேசாக இருந்தது,உடனேயே தன்னை சமாளித்துக் கொண்டார்.

"சரிங்க, நான் போறன் மத்த வேலையை கவனிக்கறன்." என்று அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் நிக்கத்.

“நான் இன்னிக்கே நம்ம அபுவை போய் பாக்கறேன்.”

"சரி" என்று கூறிவிட்டு, நிக்கத் அங்கிருந்து சென்றார்.

ஜாஃபர் கோயம்புத்துர் ஸ்டேஷனில் இறங்கினார் , அங்கு, செல்வகணேகஷ், அவருடைய நன்பா், அவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.

"செல்வா! எத்தன முறை சொன்னேன், இவ்வளவு காலைல வரவேண்டாம்னு, அப்படியும் வந்திருக்கியே?"

"நீ என் நன்பண்டா!! எப்படி வராம இருப்பேன்!”

இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

இருவரும் பேசிக்கொண்டே ஹோட்டலுக்கு சென்றனர், எப்போதுமே, எவ்வளவு குளோசாக இருந்தாலும் யார் வீட்டிலும் தங்க மாட்டார் ஜாஃபர்.

இருவரும் காபி அருந்தினர், பிறகு " சரி ஜாஃபர், நான் களம்பறேன்."

"சரி நண்பா, நான் போன் பன்றேன்"

ஜாஃபர், குளித்து ரெடியாகி, கிளம்பிவிட்டார்.

 தன் மகனின் ஹாஸ்டலுக்கு சென்றார்.

ஹாஸ்டலின் உள்ளே சென்றதும் " சார், வாங்க சார், எப்படியிருக்கீங்க?"

"நல்லாயிருக்கேன் சந்தானம், நீங்க எப்படி இருக்கீங்க?"

"நல்லாருக்கேன் சார்! இதோ போய் அப்துல்ல கூட்டிட்டு வரேன் சார்!”

"சரி, நான் வந்திருப்பது தெரிய வேண்டாம் அவனுக்கு ஸா்ப்ரைஸ், அதனால அவன்கிட்ட சொல்ல வேண்டாம், யாரோ பார்க்க வந்தது போல் இருக்கட்டும். "

"சாிங்க சார்! "

இவ்வளவு காலையில் தன்னைப் பார்க்க யார் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே சிறிது நேரத்தில், கீழே இறங்கி வந்தான் அப்துல்

தன் வாப்பாவை பார்த்து ஷாக் ஆகிவிட்டான், என்ன ஆச்சோ என்று பயந்தான்.

12 comments

  • Hi Tamil Sri. Thanks for your comments. Please continue to read my further epi and keep commenting to improve my writing.<br /><br />VJG
  • Thanks MadhumathI for your continuous support. You have been encouraging me from the very beginning. Thanks a lot. Looking forward to you continued support.<br /><br />VJG
  • Good evening, dear VJG! ரொம்ப உருக்கமான எபி! படிக்கும்போது கன்னங்களில் கண்ணீர் வழியுது! கதை, டயலொக், உறவு, சூழ்நிலை எல்லாம் சரியான விகித்த்தில் கலந்து முழு திருப்தி தருகிறது! அற்புதமான எழுத்தாளர் நீங்க! வளர்க உன் திறமை!
  • aaha .. idhu enna ippide oru vishayam. appo nijama dhanam than andha ponna or pona episodela vandha ponnu dhanam avangaloda relativea
  • Nice episode ma'am :hatsoff: .Ipidi irukalaam nu naan ninaikave illa ma'am facepalm . Ini enna panna poraanka :Q: . Waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.