தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 19 - முகில் தினகரன்
ரவீந்தரின் வீட்டிற்குள் சென்றதும் கோகுல் கேட்டான், “எப்படி சாமி?...என்னோட நடிப்பு?...சும்மா பின்னிட்டேன் அல்ல?”
“ச்சூ...கோகுல் கொஞ்சம் மெதுவாய்ப் பேசு...எதிர்ல ஓனர் வீடு இருக்கு” அவனை அடக்கினான் ரவீந்தர்.
“ஓ.கே!...ஓ.கே..” என்று அமைதியானான் கோகுல்.
“சுதாகர்ஜி நீங்க சொல்லுங்க!...நம்ம திட்டம் வொர்க் அவுட் ஆச்சா?” ரவீந்தர் கேட்க,
“ம்ம்ம்..பிரமாதமா ஆச்சு!...எல்லோரும் மொத்தமா வாயடைச்சுப் போயிட்டாங்க!... “நம்ம கோயிலுக்கு இனி மேல் எல்லா குலத்து மக்களும் வரட்டும்!...நம்ம ஆத்தா பொதுவான தெய்வம்”ன்னு சொன்னேன்!...ஒரு வார்த்தை கூட யாரும் மறுத்துப் பேசலை” சந்தோஷமாய்ச் சொன்னார் சுதாகர்ஜி.
“அடுத்து நாம செய்ய வேண்டியது மீடியா கவரேஜ்!...கோயமுத்தூர்ல எனக்கு ரெண்டு மூணு டி.வி.ரிப்போர்ட்டர்ஸ் தெரியும்...நான் அவங்களை காண்டாக்ட் பண்ணி...நம்ம கோயிலை வந்து ஷூட் பண்ணச் சொல்றேன்!...உள்ளார இருக்கற பக்தர்கிட்டே பேட்டி எடுக்கச் சொல்றேன்!...எனக்கு நடந்ததையும்..இந்த கோகுலுக்கு நடந்ததையும் அவங்க தெளிவாய்ச் சொல்ற மாதிரி ரெடி பண்ணிடுங்க ஜி” என்றான் ரவீந்தர்.
“ம்...தாராளமா” என்ற சுதாகர்ஜி, “ம்ம்ம்...வருமானம் எதுவும் கூட மாட்டேங்குதே ரவீந்தர்?” வருத்தமாய்ச் சொல்ல,
“அதெப்படி?...உடனே ஆயிடுமா?....நாளையிலிருந்துதானே உங்க கோயிலுக்கு மத்த ஆட்களும் வரப் போறாங்க?...ஆட்டோமாடிக்கா தட்டுல விழும் ஜி” என்றான் ரவீந்தர்.
“சரி...அது ஓ.கே!...கட்டிட வேலைகள்?” சுதாகர்ஜி கேட்க, “கொஞ்சம் பொறுங்க ஜி..எல்லாம் அதுவாகவே நடக்கும்” என்ற ரவீந்தர் அப்போதே மொபைலை எடுத்து ஸாலிமர் டி.வி.யில் இருக்கும் தன் நண்பன் அருணுக்கு கால் செய்தான்.
“ஹலோ...அருண்?...ரவீந்தர் பேசறேன்!...மார்க்கெட்டிங் ரவீந்தர்!”
“அடடே சொல்லுங்க ரவி?....என்ன திடீர்னு?”
“நான் இப்ப பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திட்டேன்!...வந்த இடத்துல ஒரு வித்தியாசமான அனுபவம்...அதை உங்க கிட்ட உங்க டி.வி.மூலமா பொது மக்களுக்கு அதைக் கொண்டு போகணும்!னு ஆசை..அதான் கூப்பிட்டேன்!”
“அப்படியா?...என்ன அந்த வித்தியாசமான அனுபவம்?” அருண் ஆர்வமாய்க் கேட்டான்.
ரவிந்தர் தன் அனுபவத்தையும், கோகுலின் அனுபவத்தையும் விவரித்து விட்டு, “இப்பேர்பட்ட கோயிலை உங்களை மாதிரி டி.வி.காரங்கெல்லாம் நேர்ல வந்து படம் பிடிச்சு...அதை தங்களோட