போன் செய்து நிலைமையை கூறினான். வக்கீல் சென்னையில் வாசம். அதனால் பழனியில் இருக்கும் தனக்கு தெரிந்தவரை அனுப்பினார்.
குழந்தை பெற்றோர் வரும்வரை தங்கள் வீட்டில் இருக்கும். பெற்றோர் வந்தால் அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும். குழந்தைக்கு எந்த தீங்கு நேர்ந்தாலும் தாங்களே அதற்கும் பொறுப்பு என எழுதிக் கொடுக்கப்பட்டது.
பெரிய இடத்து சமாசாரம் என்பதால் காவல் அதிகாரியும் நமக்கு எதற்கு வம்பு என்று சம்மதித்துவிட்டார்.
பழனி முருகன் கோயிலுக்கு சென்றவர்களுக்கு பிரசாதமாக சஞ்சய் கிட்டினான். சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
“இது எந்த ஜென்மத்து பந்தம் தெரியலங்க . .” நெகிழ்ச்சியாக குழந்தையை அணைத்துக் கொண்டாள் சாந்தி.
கண்டதும் காதல்தான் வரவேண்டும் என்பதில்லை. தாய் பாசமும் வரும் என்பதற்கு இவர்களே சாட்சி.
“பாப்பா பேர் என்னமா?” தனுஷ் கேட்க கொண்டிருக்க அதே சமயம்
“சாந்தி நம்ம கேசவன் லண்டனுக்கு வேல விஷயமா போனாரே இப்ப அங்கயே செட்டிலாயிட்டார்.” என ராமகிருஷ்ணன் அறையினுள் பிரவேசிக்க
“அப்பா இனி சஞ்சயோட விளையாட முடியாதாபா?” தனுஷ் சோகமாக கேட்க
“இல்லடா உன் பிரெண்டு சஞ்சய் அவன் அப்பா அம்மவோட லண்டன் போயிட்டான்” என்றபடி தனுஷை தூக்கினான்.
“தனுஷ் அந்த சஞ்சய் போனா என்ன? இங்க சஞ்சய் இருக்கானே உன்னோட விளையாட” என சாந்தி தொட்டிலில் தூங்கும் குழந்தையை காண்பிக்க . .
“என் பெஸ்ட் பிரெண்டு சஞ்சய் பேருதான் பாப்பாக்குமா?” தனுஷ் விழி அகல ஆர்வமாய் கேட்க
“ஆமா பாப்பா பேரு சஞ்சய்” என்றதுதான் தாமதம்
“சஞ்சய் சஞ்சய்” என தனுஷ் குழந்தையின் தொட்டிலை சுற்றி சுற்றி வந்து அழைத்தான் மெல்ல தூக்கம் கலையாதபடி.
“பாப்பாவ எப்பவும் நீ பத்திரமா பாத்துக்கணும் சரியா” அம்மா கேட்க
“சரிமா” என தலையாட்டினான் தனுஷ்.
தாத்தாவும் பாட்டியும் குழந்தை பக்கமே செல்லவில்லை. தொடக்கத்தில் எந்த போன் அழைப்பு வந்தாலும் குழந்தையின் பெற்றோராக இருக்கலாம் என சாந்தி நினைப்பதுண்டு. நாட்கள் செல்ல செல்ல யாரும் குழந்தையை கேட்டு வராமல் இருக்க வேண்டும் என இறைவனை