(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 22 - முகில் தினகரன்

ரவு எட்டு மணியாகியும் அர்ச்சனா இன்னும் வீடு திரும்பாத காரணத்தால் பதட்டமான பார்வதி, சம்பூர்ணத்திடம் விசாரித்தாள்.

“என்னது?...அர்ச்சனா இன்னும் வரலையா?” யோசனையுடன் கேட்ட சம்பூர்ணம், “சுரேஷ் ஊர்ல இல்லாத நாட்கள்ல இவ்வளவு நேரம் ஆபீஸ்ல இருக்க மாட்டாளே?” என்று தனக்குள் சொல்லியவாறே வீட்டிற்குள் சென்று தனது மொபைல் போனை எடுத்து ஆபீஸ் நெம்பருக்கு அழைத்தாள்.

“என்னது...ரிங் போயிட்டேயிருக்கு...எடுக்க மாட்டேங்கறாளே!...ஒருவேளை ஆபீஸ்ல அவ இல்லையோ?”

மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பார்த்து விட்டு, அதே போலிருக்க, வீட்டிற்கு வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்த பார்வதியிடம், “அர்ச்சனாவோட செல் நெம்பர் குடுங்க!” என்று கேட்டாள் சம்பூர்ணம்.

“எனக்கு அதெல்லாம் தெரியாதே!...கொஞ்சம் இருங்க அவங்க அப்பாகிட்ட கேட்டுட்டு வர்றேன்!” என்று சொல்லி பார்வதி திரும்ப,

அப்போதுதான் எங்கோ வெளியே போய் விட்டு கேட்டிற்குள் நுழைந்தான் கைலாஷ்.

அவனைக் கண்டதும், “இதோ கைலாஷே வந்துட்டான்...அவனுக்குத் தெரியும் அர்ச்சனாவின் செல் நெம்பர்!” என்றபடி பார்வதி அவனை நோக்கிச் சென்றாள்.

தன் தாயும், சம்பூர்ணமும் ஏதோ ஒரு பதட்டத்தில் இருப்பதைப் புரிந்து கொண்ட கைலாஷ், அவசர அவசரமாய் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு வந்தான்.

அவனிடம் பார்வதி விஷயத்தைச் சொல்ல.

“ப்ச்...இவ்வளவுதானா?...இதுக்கேன் இவ்வளவு பதட்டப்படறிங்க?.. அர்ச்சனா என்ன சின்னப் பாப்பாவா?...ஆபீஸ்ல ஏதாவது வொர்க் லோடு ஜாஸ்தி இருந்திருக்கும்...அதனால நேரம் போறதே தெரியாம அதுல மூழ்கியிருப்பா” என்றபடி அவன் தன் மொபைலில் அர்ச்சனாவை அழைத்தான்.

தொடர்ந்து ரிங் போய்க் கொண்டே இருந்ததே தவிர எடுக்கப்படவே இல்லை. “என்னது எடுக்க மாட்டேங்கறாளே?...ஒரு வேளை டிராவலிங்ல இருக்காளோ?”

“தம்பி...எதுக்கும் நீ நேரிலேயே போய்ப் பார்த்திட்டு வந்துடுப்பா...ஏன்னா சுரேஷும் ஊர்ல இல்லை...அதான் எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருக்கு!” சம்பூர்ணம் சொல்ல,

“ஓ.கே!...பக்கம்தானே அர்ச்சனாவோட ஆபீஸ்?...நான் நேரிலேயே போயிட்டு வந்துடறேன்!” சொல்லி விட்டு தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினான் கைலாஷ்.

அவன் சென்ற இருபதாவது நிமிடம் சம்பூர்ணத்தின் மொபைலுக்கு அர்ச்சனாவின்

4 comments

  • Sad episode 😥😥😥😥... No words to say tears my eyes😔😔😔... Archana come back soon... Be strong archana.👍Singapenney👸👸 .. Have a great future ahead.. Be bold.. Archana family do not lose hope..👍👍 Waiting for next episode...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.