(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

பண்ணிட்டு இருக்காங்களாம்!...கைலாஷ்தான் சொன்னான்!...அவன் இப்ப அங்க... ஆஸ்பத்திரிலதான் இருப்பான் போலிருக்கு!” சம்பூர்ணம் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு சொல்ல,

“அவ...உசுருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?” தேவநாதன் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டார்.

“உசுருக்கு ஒண்ணும் ஆபத்தில்லைன்னுதான் கைலாஷ் சொல்றான்!..ச்சை...இந்தச் சமயம் பார்த்து என் மகன் சுரேஷ் வேற ஊர்ல இல்லை!” புலம்பினாள் சம்பூர்ணம்.

அவசர அவசரமாய்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வந்த பார்வதி, “ஏங்க...ஏங்க...உடனே ஒரு டாக்ஸி பிடிங்க...நாமும் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்!...எனக்கு என் மகளை இப்பவே பார்க்கணும்...இப்பவே பார்க்கணும்!” பார்வதி பரிதவித்தாள்.

எல்லோரும் “கச...கச” வென்று பேசும் குரல் கேட்டு, வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்த பக்கத்து போர்ஷன் நரசிம்மன், எல்லோர் முகத்திலும் நிறைந்திருந்த கலவரத்தைப் பார்த்து விட்டு, பாய்ந்தோடி வந்து கேட்டார்.

தேவநாதன் பாதிப் பேச்சும் பாதி அழுகையுமாய்ச் சொல்லி முடிக்க,

“இதென்னங்க கொடுமையாயிருக்கு?...இதையெல்லாம் கேட்கவே ஒரு நாதியில்லையா?” என்று அங்கலாய்த்து விட்டு, டாக்ஸி அழைத்து வர தானே ஓடினார்.

****

சிவா மருத்துவ மனை.

எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் ஐ.சி.யூனிட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

பார்வதி மட்டும் வராண்டாவில் தரையில் அமர்ந்து நிறுத்த இயலாதவளாய் அழுது கொண்டேயிருந்தாள். தாய்ப்பாசம் மற்ற எல்லாப் பாசங்களையும் விட வீரியம் வாய்ந்தது அல்லவா?

தேவநாதன் நிலைக் குத்திய பார்வையோடு வராண்டா பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் இனம் புரியாத ஒரு பீதி கெட்டியாய் அப்பியிருந்தது. “நல்ல நிலையில் இருந்த மூத்தவளுக்கு ஒரு கல்யாணத்தை நடத்திப் பார்க்கவே நான் படாத பாடெல்லாம் பட்டுட்டேன்...இப்ப இவ மூஞ்சில ஆசிட்டை வேற ஊத்திட்டானுக...இவளை நான் எப்படிக் கரை சேர்ப்பேன்?” தந்தையின் பொறுப்பு என்பது தவமான தவமல்லவா?

கைலாஷும், பக்கத்து போர்ஷன் நரசிம்மனும், டாக்டர்களையும், நர்ஸுகளையும் விடாமல் துரத்தித் துரத்தி அர்ச்சனாவின் நிலை குறித்த தகவல்களைச் சேகரித்துக் கொண்டேயிருந்தனர். 

சம்பூர்ணம் சுரேஷுக்கு போன் மூலம் தகவல் சொல்லி விட்டு அவன் வரவிற்காக

4 comments

  • Sad episode 😥😥😥😥... No words to say tears my eyes😔😔😔... Archana come back soon... Be strong archana.👍Singapenney👸👸 .. Have a great future ahead.. Be bold.. Archana family do not lose hope..👍👍 Waiting for next episode...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.