மருத்துவமனை கேட்டின் முன் காத்திருந்தாள்.
ஓரளவிற்கு அர்ச்சனாவின் உடல் நிலை பற்றிய விபரங்களை அறிந்து கொண்ட கைலாஷ், தேவநாதனிடம் வந்து, “அப்பா...முகம்...கழுத்து...மற்றும் நெஞ்சுப் பகுதியில் கொஞ்சம்ன்னு தீக்காயங்கள் மாதிரி ஆஸிட் ஏற்படுத்திய ரணங்கள் அதிகமாயிருக்காம்!...அந்தக் காயங்கள் மட்டும் ஆறினால் போதுமாம்!...மற்றபடி உள் உறுப்புக்கள் எதுக்கும் எந்த சேதமும் இல்லையாம்!...உயிருக்கு ஆபத்தும் இல்லையாம்!” என்றான்.
மௌனமாய்க் குலுங்கிய தேவநாதன், “கண் பார்வை பறி போயிடாதே” கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லையாம்!...நீங்க கவலையே படாதீங்கப்பா!...சீக்கிரமே காயங்கள் ஆறிடும்...அர்ச்சனாவும் நார்மலாயிடுவா!”
“ஆனால் அந்த அழகு முகம்...அலங்கோல முகமாயிடுமேடா” சொல்லி விட்டு துயரம் தாங்க முடியாமல் வாய் விட்டே அழுதார் தேவநாதன்.
தந்தையின் அழுகையைக் காணச் சகியாத மகனும் அங்கிருந்து உடனே அகன்றான். அவன் கண்களிலும் கண்ணீர் ஊற்றுக்கள்.
தொடரும்...
Next episode will be published on 10th Apr. This series is updated weekly on Saturdays.