தனுஷ் “பாப்பா என் வீட்டுக்கு வரியா?” கொஞ்சலாய் கேட்க . . பதிலுக்கு பொக்கை வாய் தெரிய சிரித்தது.
“டேய் தனுஷ் சும்மா இருக்க மாட்டியா? . . என்னமா நீ எதுக்கு இப்படி பண்ற இது யார் குழந்தையோ?” தாத்தா காட்டமாக கேட்டார்.
“ மாமா குழந்தைய போலீஸ் ஸ்டேஷன்ல விடலாமே. இங்க பாவம் ரோட்ல வேண்டாம்” சாந்தி கேட்க
“பாரு சாந்தி இதெல்லா நமக்கு தேவையில்லாத வேலை” என பாட்டியும் அதட்ட
சாந்தி கணவனை தயக்கமாக பார்த்தாள். மனைவியின் நியாயமான வேண்டுதளுக்கு செவி சாய்த்தான் ராமகிருஷ்ணன்.
காவல் நிலையத்தில் குழந்தையைப் பற்றி சொன்னாள் சாந்தி. அவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டு “குழந்தைய அந்த பெஞ்சுல படுக்க வைங்க . . குழந்தையோட அம்மா அப்பா வரும் வரை குழந்தைகள் காப்பகத்துல சேர்த்திடுவோம்.” என காவல் அதிகாரி காது குடைந்தப்படி சுவாரஸ்யமில்லாமல் பேசினார்.
பெஞ்சில் குழந்தையை படுக்க வைக்க முயல . . அது சாந்தியின் சேலையை இறுகப் பற்றிக் கொண்டது. சாந்தி செய்வதறியாமல் தவித்தாள். பெண் கான்ஸ்டபிள் குழந்தையை வாங்க முயன்றாள். ஆனால் குழந்தை பலமாக அழுது அதற்கு மூச்சு முட்டியது.
“இது என்னடா கிரகசாரமா போச்சு . . இதுக்குதான் வேண்டாம்னு தலையில அடிச்சுகிட்டேன்” என தாத்தாவும் பாட்டியும் முணுமுணுத்தனர்.
“சார் குழந்தையோட அம்மா அப்பா வரும்வரை குழந்தைய எங்க வீட்ல வெச்சிகிறோம்” என சாந்தி கேட்க குடும்பமே அதிர்ந்தது.
“உன் பொண்டாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு” தாத்தா கத்தினார்.
“அதெல்லாம் முடியாதும்மா . . நீங்க குழந்தைய வித்துட்டிங்கனா? இல்ல குழந்தைய பிச்ச எடுக்க வெச்சிங்கனா . . சட்டத்துக்கு யார் பதில் சொல்றது?” காவல் அதிகாரி கூறினார்.
“ஐயா அப்படி சொல்லாதீங்க எனக்கும் மகன் இருக்கான். தாய் பாசம்னா என்னான்னு எனக்கு தெரியும். பச்ச குழந்தைய பிச்ச எடுக்க வைப்பனா?” சாந்தி கண்ணீர் மல்க கூறினாள்.
ஏனோ ராமகிருஷ்ணனுக்கும் குழந்தையை பிடித்துவிட்டது. சாந்தி அருகில்தான் நின்றிருந்தான். குழந்தை அவனின் சட்டை பாக்கெட்டிலிருந்து பேனா எடுக்க முயன்றது. ஆனால் எடுக்க வரவில்லை அவனே எடுத்துக் கொடுத்தான். பேனா குழந்தை கண்ணில் குத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டான்.
பிறகு தன் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினான். அடுத்ததாக தன் குடும்ப வக்கீலுக்கு