வேண்டினாள்.
குழந்தை மேலுள்ள கோபத்தை சாந்தியிடமும் ராமகிருஷ்ணனிடமும் காட்டினார்கள் வீட்டின் பெரியோர். தனுஷ் மேல் தனி கவனத்தை காட்டினார் தாத்தா. அவனை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றார்.
நாட்கள் வாரம் மாதம் வருடம் என உருண்டோட அப்பா அம்மா அண்ணன் என்னும் புதிய உறவுகளின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தான் சஞ்சய். தாத்தா பாட்டியின் பாசம் கிட்டியது ஆனால் முழுவதுமாய் அல்ல.
அனைத்தையும் கேட்ட சஞ்சய் தனக்காக சாந்தி பட்ட கஷ்டத்தை எண்ணி நெகிழ்ந்து போனான். தன்னை வேண்டாம் என தூக்கி எறிந்தவர் எங்கே? தனக்காக இத்தனை பாடுபட்டவர் எங்கே என நினைத்தவன். ஒரு முடிவு எடுத்தவனாய் மனதை சாந்தப்படுத்திக் கொண்டான்.
“ சத்தியமா சொல்றேன் அம்மா . . உங்கள விட்டு நான் எங்கயும் போக மாட்டேன். என்னை தேடி யாராவது வந்து நீ தான் என் பையன்னு சொன்னாலும் என்னிக்கும் எப்போதும் போக மாட்டேன் ” என்றான் சஞ்சய். தன் அன்னையை அணைத்து முத்தமிட்டான். கூடவே அப்பாவும் தனுஷும் அவனை கட்டி அணைத்தனர். நான்கு நெஞ்சங்களிலும் அமைதியும் மகிழ்சசியும் தாண்டவமாடியது.
துன்பம் என்னும் ஆழிப்பேரலையால் அந்த குடும்பம் சிதறிவிடும் என்று அஞ்சிய தனுஷ் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
கண்ணை துடைத்துக் கொண்ட சஞ்சய் “அழுகாச்சி சீன் போதும். நமக்கு இதெல்லாம் செட் ஆகாது” என குறும்பாய் சொன்னதும். அனைவர் முகத்திலும் புன்னகை பூத்தது.
“அண்ணிக்கு இன்விடேஷனை வாட்ஸ்அப்ல அனுப்பினியா?”
இதே நினைவில் “ம்ம் அனுப்பிட்டேன்”
“பாத்தீங்களாமா பக்கத்துல நீங்க இருக்கீங்க உங்களுக்கு இன்விடேஷன் காட்டல . . அண்ணிக்கு அனுப்பி இருக்கான் பாருங்க” என தாயிடம் கோர்த்துவிட்டு சிரித்தான்.
“அம்மா அது இவன்தான் . . .” என தனுஷ் திணற . . சஞ்சய் எஸ்கேப் ஆக முயற்சித்தான். அவனை தனுஷ் துரத்த
“பிக் புரோ ஈவ்னிங் அண்ணிய மீட் பண்ணும்போது மறக்காம கிப்ட் வாங்கிட்டு போங்க” என சொன்னதுதான் தாமதம் தாயும் தந்தையும் அவனை “சொல்லவே இல்ல” என்பதாய் முறைக்க . .
சஞ்சை தாங்கள் வீட்டிற்கு வந்தது முதல் நடந்த அனைத்தையும் சொன்னான். “பிக் ப்ரோ பாவம் மன்னிச்சு விட்டுடுங்க”