“ப்ச்...என்னை விடு அர்ச்சனா...உன்னை இந்த கதிக்கு ஆளாக்கியவனுகளை நான் சும்மா விடப் போறதில்லை!”
ஐ.சி.யூனிட்டிலிருந்து வெளியே வந்த சுரேஷ் உடனே இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து அந்த “துருவா டிரேடிங் கம்பெனி” மீதான தனது சந்தேகத்தை உறுதிப் படுத்தினான்.
அர்ச்சனாவிற்கு ஏற்பட்ட விபரீதத்தைப் பற்றிய தகவல் தெரிந்ததும், ஊரிலிருந்து கணவருடன் வந்திற்ங்கிய சுலோச்சனா கதறிய கதறல் அந்த மருத்துவ மனையிலிருந்தோர் எல்லோரையும் மனம் கனக்கச் செய்து விட்டது.
“எனக்கு விதவிதமா மேக்கப் போட்டுப் போட்டு அழகு பார்ப்பாளே...இப்ப அவளே அலங்கோலமாயிட்டாளே!...உன்னோட அழகு முகத்தில் ஆசிட் ஊத்த எப்படிடி மனசு வந்தது அந்தப் பாவிகளுக்கு!”
அவளைச் சமாதானப் படுத்திய பார்வதி, அந்தக் காரியத்தைச் செய்தது யார்? என்று கண்டுபிடித்து விட்டதையும், காவல் துறை அவர்களை விரைவில் கைது செய்யப் போவதையும், சொல்லி சுலோச்சனாவை ஆறுதல் படுத்த முயல,
“அம்மா...இனி யாரைக் கண்டுபிடிச்சு என்னம்மா பிரயோஜனம்?...போன அழகு முகம் போனதுதானே?...இனி...அவளை யார் கட்டிக்குவா?...எனக்கு கழுத்துல தாலி ஏறணும்னு எவ்வளவு சிரமப்பட்டா...இப்ப அவ கழுத்துக்கு ஒரு தாலி வருமா?ன்னே சந்தேகமாயிருக்கே!”
சுலோச்சனாவின் அந்தப் புலம்பலைக் கேட்ட சுரேஷ், “மேடம்...ஒரு நிமிஷம்!” என்றழைக்க,
தன் அழுகையை நிறுத்திக் கொண்டு அவள் சுரேஷைப் பார்க்க,
“நீங்களும்...உங்க குடும்பத்துல மத்தவங்களும் சம்மதிச்சா...உங்க அர்ச்சனா கழுத்துல தாலி கட்ட நான் சம்மதிக்கறேன்!” என்றான்.
திடுமென அவன் அப்படிக் கேட்டு விட, எல்லோரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டனரே தவிர யாராலும் உடனடியாக எந்த பதிலும் தர இயலவில்லை.
அதனால், சுரேஷே தொடர்ந்தான், “என் மேல் பொறாமை கொண்ட சில போட்டிக் கம்பெனிக்காரங்க...என் மீது காட்ட வேண்டிய கோபத்தைத்தான்...அர்ச்சனா மீது காட்டியிருக்காங்க!...உண்மையைச் சொல்லணும்னா எனக்கு வரவேண்டிய அசம்பாவிதத்தை எனக்காக அவ ஏத்துக்கிட்டிருக்கா!...அதனால...அவளோட இந்த நிலைக்கு நான்தான் காரணம்னு என் மனசு என்னை உறுத்துது!...அந்த உறுத்தல் தீரணும்ன்னா..அது...அவளையே நான் மணந்து கொண்டால் மட்டும்தான் தீரும்!”
தேவநாதனுக்கும் சரி, பார்வதிக்கும் சரி, அது ஒரு விதத்தில் ஏற்புடையதாக இருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் அதைப் பற்றிப் பேசுவதை விட, அர்ச்சனா உடல் நிலை தேறி