நார்மல் நிலைக்கு வந்த பிறகு, அதைப் பற்றிப் பேசுவதே சரி, என்பதை உணர்ந்து,
“தம்பி...உங்களோட நல்ல மனசு எங்களுக்குப் புரியுது!...இருந்தாலும் இதைப் பற்றி நாம இப்ப பேசறதை விட, அர்ச்சனா உடம்பு தேறிய பிறகு...”என்று தேவநாதன் இழுக்க,
“கரெக்ட்!...கரெக்ட்!...அப்படியே செய்யலாம்!..நான் கூட இதை பிறகு பேசலாம் என்றுதான் நினைத்திருந்தேன்...உங்க மூத்த மகள் தன் தங்கச்சி கழுத்துக்கு இனிமேல் தாலி ஏறுமா?ன்னு சொல்லி அழுதாங்களே...அதைப் பார்த்திட்டுத்தான் நான் பொறுக்க முடியாம இப்ப இதைப் பற்றிப் பேசினேன்!...அதனால...தயவு செய்து என்னைத் தவறாக நினைக்காதீங்க ப்ளீஸ்!”
எல்லாவற்றையும் அமைதியாக் கவனித்துக் கொண்டிருந்த சம்பூர்ணமும் பார்வதியிடம் வந்து, “பார்வதி மனசார சொல்றேன்...உங்க மகள் அர்ச்சனா மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மருமகளா வர...நான் ரொம்பக் குடுத்து வெச்சிருக்கணும் பார்வதி!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்ல,
விழிகளில் நீரோடு சம்பூர்ணத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு தழுதழுத்தாள் பார்வதி. அவள் மனம் முந்தைய கால கட்டங்களில் இதே சம்பூர்ணமும், அர்ச்சனாவும் கீரியும், பாம்புமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்த காலங்களை எண்ணிப் பார்த்தது. காலம் யாரையும், எல்லாவற்றையும் மாற்றி விடும், இயல்புடையதல்லவா?
தொடரும்...
Next episode will be published on 17th Apr. This series is updated weekly on Saturdays.