ஆனால் அவன் நினைவுகள் பெர்முடா முக்கோணம் செல்ல வழியை யோசிக்க ஆரம்பித்து இருந்தது.
காதலை சொல்லவும் இல்லை... கல்யாண நாள் குறிக்கவும் இல்லை... கண்ணோடு கண் கலக்க மனதோடு மனம் சுயம்வரம் நடத்த ஊரறிய மணப்பந்ததில் உட்கார்ந்து உலகம் சுற்ற போகும் நாட்களுக்காக காத்திருக்க தொடங்கினார்கள்.
மும்பை...
ராமு அண்ணா... சீக்கிரம் வாங்க.. ஜோசியர் வந்து விட்டார்.
இந்தா வந்து விட்டேன்.
ஜோசியர் ஐயா என் மகன் கார்த்திக் மருமகள் குயிலி... இரண்டு பேருக்கும் என்றைக்கு திருமணம் வைக்கலாம்.
ராமு ஐயா.. அவங்க மும்பை வந்த அடுத்த நாளே நல்ல நாள் என்று சொல்ல திருமண வேலைகள் வேகமாக நடந்தது.
பெர்முடா முக்கோணம்...
பிரதாபன்... நாம வெளியே போக வழியே இல்லையா...
பிரசாத் சாரே... இங்கே இருந்து வெளியே போனானே கார்த்திக்... அவன் மீண்டும் இங்க வந்தால் நாம வெளியே போக வழி சொல்லுவான்.
அவன் வருவானு சொல்றீங்களா...
பொறுத்திருந்து பார்ப்போம்...
தமிழ் நாட்டில் மலைவாழ் குக்கிராமத்தில்...
புஷ்பா... ஏன் இவ்வளவு கோபமா இருக்க...
அம்மா... என் புருஷனை ஆழ்கடலில் தள்ளிவிட்டு இந்த ராகவ் பய இல்லை இல்லை கார்த்திக் பய கல்யாணம் கட்டி வாழ போறானா?... இல்லை... இல்லை.. இல்லவே இல்லை... அவன் குடும்பத்தை வேறோட அழிப்பேன்...
புஷ்பா... ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கஞ்சியை தட்டி விட்டுட்டா அப்புறம் நீ பட்டினி தான் கிடக்கனும். ஆக்ரோஷம் ஆவேசத்தை குப்பையில் கடாசிட்டு கஞ்சியை வயித்துக்கு தள்ளு என்று அகன்றாள் புஷ்பாவின் தாய்...
கஞ்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள் புஷ்பா...
அன்பு வாசக தோழர்களே, தோழிகளே...
இதுவரை என்னுடைய கதையைப் படித்து உற்சாகப்படுத்தி கருத்துகளை பதிவு செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி...