கண் முன்னே இருக்கும் மகனிடம் உண்மை சொல்ல முடியாமல் தவித்த வேதனையும் என்னை இழந்து விடக் கூடாது என்ற பயமும் புரிந்தது.
இயற்கையாக அவர் மீது எனக்கு ஏற்பட்ட பாசத்தின் காரணமும் புரிந்தது. அதோடு காப்பாற்ற பட வேண்டிய எண்ணிக்கை அதிகம்.. அதோடு ஒருவரிடம் உண்மை சொல்லி அது வெளியே தெரிந்தால் அது மற்றவர் உயிரை எடுத்து விடும் என்று தான் மிக கவனமாக பொறுமையாக செயல் பட்டேன்.
அப்பா என்னிடம் உண்மையைச் சொல்ல வந்த போது வேண்டும் என்றே வெளியே தள்ளி கதவை பூட்டினேன். அடுத்த நொடியே சங்கர் அங்கிருந்து அப்பாவை அழைத்து சென்று விட்டான்.
பிரதாபனை நம்ப வைத்து உங்களையும் காப்பாற்றி அழைத்து வந்து விட்டோம் என்று சொல்ல குயிலிக்கு அவன் செய்தது தான் சரியென்று தோன்ற அங்கிருந்து அறைக்கு செல்ல திரும்பும் போது ராமு மாமா அதாவது கார்த்திக் அப்பாவும் தனக்கு பின்னால் நின்று அனைத்தையும் கேட்டு இருப்பதை உணர்ந்தவள் மாமா... என்றாள் மெல்லிய குரலில்...
இதை தான் ஏற்கனவே உன்னிடம் சொல்ல முயற்சி செய்தேன். ஆனால் நீ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. இப்போது புரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல ஆம் என்று தலையசைத்து விட்டு சென்றாள்.
இரண்டு நாள் கழித்து...
அம்மா... நான் தமிழ் நாடு போகனும்.
ஏன் குயிலி...
கொஞ்சம் வேலை இருக்குமா... ப்ளீஸ்
தனியா எங்கேயும் போக வேண்டாம்.
தனியா வேண்டாம்... நான் கூட போகிறேன் என்றவாறே வந்தான் கார்த்திக்.
அவனையே விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் குயிலி.
ஆனால் கார்த்திக் அதை கவனிக்காமல் ஃப்ளைட்ல போய்ட்டு திரும்புறோம்.. எனக்கும் அங்கே கொஞ்சம் வேலை இருக்கு. அதோடு இங்கும் வேலை இருக்கு என்று பட்டியலை தன் அத்தையிடம் நீட்டி முழங்கி கொண்டு இருந்தான்.
எப்படியும் கார்த்திக் கூட வருவான். அவன் கூட நேரம் செலவு செய்யலாம் என்று நினைத்த குயிலிக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளது முக உணர்வுகள் வெளிப்படையாக தெரிய ஏக்கத்துடன் கார்த்திக்கை பார்த்தாள்.
அதை கவனித்த சங்கர்... மச்சான், டிரெய்ன்ல ஏசி கோச்ல உங்க இரண்டு பேருக்கும் டிக்கெட்