விசித்திரமான ஒரு சொர்க்கலோகம்...
காதலுக்கு பொதுவான விதி ஏதுமில்லை..
தீர்த்து வைக்க காதல் கணக்குமில்லை...
சமன்படுத்த வேதியியல் ஃபார்முலாவும் இல்லை..
இயல்பாக எடுத்து காட்ட இயற்யியலும் இல்லை...
புரியாத பெயர் கொடுக்க தாவரவியலும் இல்லை...
உயிர் பிரித்து பார்க்க விலங்கியலும் இல்லை...
கவிதை எழுதி உணர்த்த செய்யுளும் இல்லை...
கதையாக கூற துணைப் பாடமும் அல்ல...
புரியாமல் தவிக்க ஆங்கிலமும் அல்ல...
காலம் போட்டு காட்ட வரலாறும் அல்ல...
இது தான் காதல் என்ற வரையறையே இல்லை...
"காதல்"
ஒரு மந்திர வார்த்தை...
மயங்கிய மதியை விழிக்க செய்யும்..
விழித்த அறிவை மயங்க செய்யும்...
உயிரோடு கலந்து உணர்வாக நிறைந்து
ஊனோடு கலந்து உயிர் மூச்சாக உயிர் வாழ்கிறது....
அவளது முன்னெற்றியில் விழுந்த முடியை தன் விரல் கொண்டு சரி செய்தவன் அவள் எதிர் பார்க்காத அந்த நேரத்தில் அவள் முன் தலையில் இதழ் பதித்தான். அவளுக்குள் சொல்ல முடியாத பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
அவன் மீது இருந்த கோபத்தை வாய்விட்டு கூறி சண்டை பிடிக்கவில்லை. அதை மறந்து விட்டதை கதையாக கூறி காலம் கடத்தவுமில்லை. அவன் விரலோடு விரல் கோர்த்து அவனருகில் அமர்ந்து கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் நம்ம ஹனிமூன்" க்கு பெர்முடா முக்கோணத்துக்கு அழைத்து போவியா கார்த்திக் என்றாள்.
ஒரு நொடி திகைத்து அவள் முகத்தை பார்த்தவன் என் செல்ல பொண்டாட்டி கேட்டு செய்யாமல் இருப்பேனா... நிச்சயம் கூட்டிட்டு போறேன் என்றதும் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் பெண்ணவள்... அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு அவள் முதுகை ஆதரவாக வருடினான் அவளவன்...