புக் செய்து விட்டேன் என்று சங்கர் சொல்ல டேய் மாறி மாறி எப்போ போய் சேர... வேலையை யார் பார்ப்பது என்று சொல்ல, அதெல்லாம் நாங்க இருக்கோம்...என்றவன் குயிலியை கண் காட்டி சிரிக்க அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் கார்த்திக்கும் சரி என்றான்.
நாட்கள் வேகமாக ஓட அவர்கள் பயணநாளும் வந்தது.
ஏசி கோச்சில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தனர். விழிகள் நான்கும் ஒன்றோடு ஒன்று கலந்து உரையாடிக் கொண்டன.
காதலை வாய்திறந்து சொல்லவுமில்லை...
மணிக்கணக்கில் நேரம் செலவழித்து உரையாடவுமில்லை...
கோபத்தை தீர்க்க என்று மெனக்கெடவுமில்லை...
சொன்னால் தான் காதல் புரியுமா?
சொல்லி தான் புரிய வைக்க இயலுமா?...
உயிரோடு கலந்து இருக்கும்
உன்னதமான உணர்வு அல்லவா?...
கையோடு கை கோர்த்து
கடற்கரையில் சுற்றவுமில்லை...
தொட்டு தொட்டு வார்த்தைகள் கோர்த்து
அலைபேசியில் அனுப்பவுமில்லை...
தோளில் தலை சாய்த்து
கதைகள் ஏதும் பேசிடவில்லை...
நெஞ்சில் முகம் புதைத்து
நேசமதை உணர்த்தவுமில்லை...
கட்டியணைத்து கொண்டதுமில்லை...
காதலாய் முத்தமிட்டதுமில்லை..
களவாய் நாட்கள் சென்றதுமில்லை..
காத்திருந்து ஓய்ந்ததுமில்லை...
சினுங்கி சீண்டி பேசியதும் இல்லை...
சண்டையிட்டு அழுது புரண்டதுமில்லை...
காதல்...
புரிந்து கொள்ள முடியாத
புரிய வைக்க இயலாத