வளையல்களும், காதுக்கு கம்மலும் கொடுத்தாள் .
"எனக்கு எதுக்கு தனம் அதான் தங்கச்சிகளுக்கு வேண்டியது வாங்கிட்டியே அப்புறம் என்ன?" என்று லட்சுமி கேட்கையில் , தனத்திற்கு கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.
"எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து உன் கழுத்தில் கையில் வெறும் இந்த க்ளாஸ் வளையலும் இந்த கருப்பு மணி மாலையும் தான் பார்க்கறேன், நீ போட்டுக்கம்மா, இப்போ இந்த ரெண்டு பெண்களோட கல்யாணம் வரபோறது சந்தோஷமா இரும்மா." அவள் அம்மா கண்ணிலிருந்தும் கண்ணீர் எட்டி பார்த்தது .
"எனக்கு எப்படி தனம் சந்தோஷம் வரும், உனக்கு ஒரு வழி பொறந்தாதான், எனக்கு சந்தோஷம்."
"எனக்கு என்ன குறைவும்மா, எனக்கு என் மகன் கிடைச்சுட்டான் இதுக்கு மேல ஒன்னும் பேசாத அவ்வளவுதான்!" என்று அவள் அம்மாவின் வாயை அடக்கிவிட்டாள். பிறகு கையிலிருந்த புடைவைகளையும் கொடுத்தாள், "அதெல்லாம் அவங்க ரெண்டு பேருக்கும், இது உனக்கும்மா."
"எனக்கு எதுக்கு இவ்வளவு புடவை?"
"பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு போதும்."
எல்லாவற்றையும் எடுத்து பார்த்துவிட்டு நல்லாயிருக்கு. " என்று கூறும்போதே கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது
"இதெல்லாம் அப்பாவுக்கு! "என்று கொடுத்தாள்.
" எல்லாம் நல்லாயிருக்கு "'என்று அவள் அப்பாவும் பெருமையுடன் கூறினார்.
இப்படியே மணி ஆகிவிட்டது பார்க்கவேயில்லை, "சரி அவங்க வந்துடப் போறாங்க எல்லோரும் ரெடியாகுங்க" என்று தனம் சொல்லவும் எல்லோரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர் .
அவள் அஜய்க்கு போன் செய்தாள், அஜய் போன் எடுத்தவுடன் "எங்க இருக்க அஜய்?"
"லைப்ரரிலம்மா! "
"இன்னுமா?"
"ம்.. ஆமாம். என்று ரொம்ப மெதுவாக பேசினான்.
"சரி, சரி நீ கிளம்பின உடனே எனக்கு கால் பண்ணு!"
'ஓகே!"
அவன் குரலை கேட்டவுடன் மனதிலிருந்த கவலையெல்லாம் பறந்தோடிவிட்டது.
அவனிடம் பேசுமுன் மனது கனத்திருந்தது இப்போது லேசான மாதிரி இருந்தது அவளுக்கு , மனசுக்குள்ளேயே தேங்க்ஸ் டா அஜய் ‘என்று புன்னகையுடன் கூறிக் கொண்டாள்.