தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 22 - முகில் தினகரன்
மறுநாள் அதிகாலையிலேயே சுதாகர்ஜி வீட்டிற்குச் சென்றான் ரவீந்தர். “ஜீ...உங்களுக்கு நான் உதவி செஞ்ச மாதிரி எனக்கும் நீங்க ஒரு உதவி செய்யணும்” தன் கோரிக்கையை வைத்தான்.
“என்னப்பா?...லவ் மேட்டரா?...எவ கிட்ட மாட்டினே?” குறுஞ்சிரிப்புடன் சுதாகர்ஜி கேட்டார்.
“ஜீ....நீங்க லவ் மேட்டர்ன்னு சொன்னது சரி!...ஆனா...என்னோட லவ்வு!ன்னு நெனைச்சதுதான் தப்பு”
“பின்னே?...வேற யாரோட லவ்வு?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டார் சுதாகர்ஜி.
ரவீந்தர் நேற்றிரவு சம்பவங்களை அப்படியே ஒப்பித்தான்.
“எனக்கு அந்த ராஜேஸையும்...அவன் பெற்றோரையும் நன்றாகவே தெரியும்!....எங்க ஆளுகதான் அவங்க...அவங்களுக்கு உப்பாயம்மன்தான் குல தெய்வம்!...சரி...அந்தக் காதல் ஜோடிகள் இப்ப எங்கிருக்காங்க?” சன்னக் குரலில் கேட்டார் சுதாகர்ஜி.
“எங்க வீட்டுலதான் அடைக்கலம் குடுத்து வெச்சிருக்கேன்!...அக்கம் பக்கத்துல யாருக்கும் தெரியாது!...கஸ்தூரி அய்யாவுக்கும் கூடத் தெரியாது!”
சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டு யோசித்த சுதாகர்ஜி, “சரி...இப்ப இதுல நான் என்ன பண்ணணும்?” கேட்டார்.
“இன்னிக்கு செவ்வாய்க் கிழமை...நீங்க அருள்வாக்கு சொல்ற நாள்!...இன்னிக்கு நீங்க சொல்ற அருள்வாக்குல ஒரு காதல் ஜோடி இணையணும்”
“எப்படி?”
“நான் சொல்ற மாதிரி நீங்க ஒரு அருள் வாக்கு சொன்னீங்கன்னா...அதை அந்தப் பையனோட பெற்றோர்கள் மறுக்காம அப்படியே ஏத்துக்குவாங்க!...சொல்லுவீங்களா?” ரவீந்தர் கேட்க,
“ஒருவேளை அவங்க ஏத்துக்கலை!ன்னா...?”
“தெய்வ குத்தமாயிடும்”னு சொல்ல வேண்டியதுதான்!” என்றான் ரவீந்தர்.
“சரி இந்தப் பக்கத்துல சரி பண்ணிடறே?...அங்க...அந்தப் பொண்ணு சைடுல என்ன பண்ணப் போறே?” சுதாகர்ஜி கேட்டார்.
“அதுக்கு வேற ஏற்பாடு வெச்சிருக்கேன்!...நீங்க இந்த அருள் வாக்கை மட்டும் சரியாய்ச் சொல்லிடுங்க...” என்றபடியே சுதாகரின் காதருகே வந்து சொல்ல வேண்டிய அருள் வாக்கின் சாராம்சத்தை ஒப்பித்து விட்டு...அங்கிருந்து உடனே கிளம்பிய ரவீந்தர், வரும் வழியில் தன் வீட்டிலிருக்கும் அந்த காதல் ஜோடிகளுக்கான உணவுப் பொட்டலங்களை மறக்காமல் வாங்கி வந்தான்.
***
மாலை.