(Reading time: 5 - 10 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

மேலே பார்த்து யோசித்த சுதாகர்ஜி, “உன் மகனுக்கு மடத்துக்குளத்திலிருந்து பொண்ணு வருவா!...அவள் நம்ம உப்பாயம்மனோட அவதாரம்!...ஆனா..வேற சாதிக்காரி!...அவளை மறு பேச்சு பேசாம மருமகளா ஏத்துக்கங்க!...இல்லேன்னா...இந்த ஜென்மம் மட்டுமில்லை...அடுத்த ஜென்மத்திலும் உங்க மகனுக்குக் கல்யாணமே ஆகாது!” என்றார்.

“அய்யோ...சாமி?...என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?” அழுது விடுபவள் போலானாள் இந்திரா.

“தாயி...அது நான் சொன்ன வார்த்தைகளல்ல...எனக்குள்ளிருந்து அம்மன் சொன்ன வார்த்தைகள்...நீங்க அதை நிச்சயமா மீறக் கூடாது!...மீறினால்...அவ சொன்ன மாதிரி செஞ்சிடுவா!...நீங்களே உங்க பையனோட கல்யாணத்தைக் கெடுத்திடாதீங்க”

சில நிமிடங்களுக்குப் பிறகு, “சாமி...மடத்துக்குளம் பொண்ணு!ன்னு பொத்தாம் பொதுவாய்ச் சொன்னா...நாங்க எங்கே போய்....யாரைத் தேடறது சாமி?” வெங்கிடுபதி கேட்டார்.

“கவலைப்படாதீங்க...வாக்குச் சொன்ன அம்மன்...பொண்ணை உங்க வாசலுக்கே அனுப்பி வைப்பாள்” என்றார் சுதாகர்ஜி.

நம்பிக்கையோடு விடை பெற்றுச் சென்றனர் ராஜேஸின் தாயும், தந்தையும்.

தொடரும்...

Next episode will be published on 30th Apr. This series is updated weekly on Fridays.

Go to Kaanpome ennaalum thirunaal story main page

2 comments

  • Samiya kuda vida matengurangale ena sketch ena sketch :D nice update sir 👏👏👏👏👏👏<br />Sundar ji vera level kk promote agitaru pole 😜<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.