(Reading time: 8 - 15 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 25 - முகில் தினகரன்

றங்காவலரும், அவருடன் வந்தவர்களும் சஃபாரி உடையிலிருந்தவரை யோசனையோடு பார்க்க, சுதாகர்ஜி முந்திக் கொண்டார். “சார்...பேரு சஞ்சீவ் குமாரசாமி!...மூணு மில்லுக்கு ஓனர்” என்றார்.

“அடடா...என சார் என்னை உங்களுக்கு ஞாகமில்லையா?” அறங்காவலர் ராமலிங்கம் கேட்க,

“ம்ம்ம்..ஞாபகம் வரலையே?” கண்களைச் சுருக்கிக் கொண்டு சொன்னார் அவர்.

“சார்...ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உங்க உடுமலைப்பேட்டை மில்லுக்கு பஞ்சு சப்ளை பண்ணிட்டிருந்தேன் சார்!... “ராம்ராஜ் காட்டன் சப்ளையர்ஸ்”...உங்க கிட்ட நாலஞ்சு வந்து பேசிட்டுப் போயிருக்கேன்” அறங்காவலர் எடுத்துக் கொடுக்க,

“ராம்ராஜ் காட்டன் சப்ளையர்ஸ்ன்னா...நீங்க ராமலிங்கமா?” சஞ்சீவ் குமாரசாமி கேட்டார்.

“ராமலிங்கமேதான்” என்றான் அறங்காவலர் புன்னகை முகத்தோடு.

“ஆஹா...இவங்க ரெண்டு பேரும் பழைய சிநேகிதர்களா?...போச்சு...நான் தப்பிக்கவே முடியாது...” சுதாகர்ஜி பேந்த பேந்த விழித்தார்.

தன் மகளைப் பற்றியும், தானும் தன் மனைவியும் இந்த உப்பாயம்மன் கோயிலுக்கு என்ன எதிர்பார்த்து வந்திருக்கின்றோம், என்பதையும் அறங்காவலருக்கு விளக்கமாய்ச் சொன்னார் அந்த சஞ்சீவ் குமாரசாமி.

“நீங்க கவலையே படாதீங்க!...எங்க குலதெய்வம் அற்புதங்கள் மேல் அற்புதம் செஞ்சுக்கிட்டேயிருக்கா...நிச்சயம் உங்க விஷயத்திலும் ஒரு அற்புதத்தைச் செஞ்சு காட்டுவா!...எனக்கு நம்பிக்கையிருக்கு” ஆணித்தரமாய் அடித்துச் சொன்னார் அறங்காவலர்.

“ஆனா...எனக்கு நம்பிக்கையில்லையே...”உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார் சுதாகர்ஜி.

அப்போது அந்த சஞ்சீவ் குமாரசாமியின் மனைவியும், கார் டிரைவரும் சேர்ந்து தாறுமாறாய் சேலையணிந்து, தலைவிரி கோலமாயிருந்த ஒரு இளம் பெண்ணை தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

சுதாகர்ஜி, அறங்காவலர் முதற்கொண்டு எல்லோரும் அந்தப் பெண்ணை இரக்கத்தோடு பார்த்தனர்.

“ஸ்வாமிஜி...அந்தப் பெண்ணை சன்னதிக்குள் கூட்டிட்டுப் போய்...சாமிக்குப் பக்கத்துல உட்கார வெச்சு மந்திரங்களை ஓதுங்க!...தீபாராதனையை காட்டிக்கிட்டே இருங்க!...நாங்க இங்க மணியை அடிச்சுக்கிட்டே இருக்கோம்!...நிச்சயம் ஆத்தா கண் திறப்பா” உச்ச நம்பிக்கை தெரிந்தது அறங்காவலர் பேச்சில்.

“தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு...இனி ஜான் என்ன?...முழம் என்ன?” என்கிற நிலைக்கு வந்து விட்ட, சுதாகர்ஜி, அந்தப் பெண்ணின் தாயாரைப் பார்த்து, “நீங்களே கூட்டிட்டு வாங்க”

2 comments

  • Nice update sir 👏👏👏👏👏👏👏 idhu yaroda miracle aga irukkum??? Look forward to see what happens next <br /><br />Thank you.
  • :grin: sudhargar kuzhappam eppadi theerumendru parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.