ரூபாயை எங்க நன்கொடையாய் தர்றோம்!...இந்தக் கோயில் கட்டிடத்தை புதுப்பிற்கும் வேலையை ஆரம்பிங்க!...இவ்வளவு சக்தி வாய்ந்த அம்மன்...இப்படிப் பாழடைஞ்ச கோயில்ல இருக்கலாமா?....கூடாது!...உடனே கோயிலைப் புதுப்பிப்போம்!...இன்னும் என்னென்ன வசதிகள் வேணுமோ கேளுங்க!...என் சொத்து முழுவதுமே இந்த உப்பாயம்மனுக்குத்தான்” உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்.
சுதாகர் மனதில் வேறு விதமான எண்ணங்கள் ஓடின. “ஒருவேளை இதெல்லாம் ரவீந்தர் ஏற்பாடாயிருக்குமோ?...மதுரை போற வழில உடுமலைப்பேட்டை போய் அங்க ஆட்களை செட் பணி அனுப்பியிருப்பானோ?...அப்படியே இருந்தாலும் இந்த மனுஷன் “அஞ்சு கோடி நாளைக்கே தர்றேன்...அதுக்கு மேலே எவ்வளவு வேணும்னாலும் கேளுங்க தர்றேன்”னு சொல்றாரே?...எல்லாம் டுபாக்கூரா?..ம்ம்...அறங்காவலர் ராமலிங்கத்திறு இந்த சஞ்சீவ் குமாரசாமியைத் தெரிஞ்சிருக்கு!...அப்படின்னா...இது ரவீந்தர் ஏற்பாடாய் இருக்காது!...ஆனா அந்தப் பொண்ணு சம்யுக்தா “அம்மன் என்னைப் பார்த்து சிரிச்சுது...எழுந்து வந்து தலையைத் தடவிச்சு”ன்னெல்லாம் சொன்னாளே?...அதெல்லாம் பொய்யா?...நிஜமா?...ஒருவேளை அந்தப் பொண்ணு மட்டும் ரவீந்தர் செட் பண்ணிய ஆளாயிருக்குமோ?...அய்யோ....ஒண்ணுமே புரியலையே?”
தொடரும்...
Next episode will be published on 21st May. This series is updated weekly on Fridays.