(Reading time: 7 - 13 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

கொண்டிருந்தது.  முட்செடிகளில் அழுந்தியதில் சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்கள் அவன் நிர்வாண உடம்பில் உண்டாயின.

சரியாக இருபத்தி ஐந்தாவது நிமிடம் தனசேகர், கிணற்றின் பாறைப் பகுதிக்கு மேலே, மண் பகுதிக்கு வந்து விட, தன் காலால் இன்னொரு பெரிய செடியை வளைத்து அவன் கை இருக்கும் பகுதிக்குக் கொண்டு சென்றான் முரளி.

சட்டென்று தனது இன்னொரு கையால் அந்தச் செடியைப் பற்றிய தனசேகர், அதை இழுத்துப் பார்த்தான். அது தன் எடை முழுவதையும் தாங்கும் அளவிற்கு உறுதியாயிருக்க, முரளி அனுப்பிய கயிற்றை விட்டு விட்டு இரண்டு கைகளாலும் அந்த செடியைப் பற்றிக் கொண்டு, காலால் உந்தி உந்தி தானே மேலே வர முயன்றான்.

செடியின் வேர்ப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாய் பெயர்ந்து வர, பாய்ந்து வந்து தனசேகரின் ஒரு கையைப் பற்றினான் முரளி.

இருவரும் ஒரு சேர முயற்சித்ததில் முழுவதுமாய் மேலே வந்திருந்தான் தனசேகர்.

அவன் முன் நிர்வாணமாய் நிற்க வெட்கப்பட்ட முரளி, செடி மறைவில் ஒளிய, அவன் மனதைப் புரிந்து கொண்ட தனசேகர் முழுவதும் சேறு அப்பியிருந்த தன் சட்டையைக் கழற்றி முரளியிடம் எறிந்தான்.  அதைப் பிடித்து தன் இடுப்பில் கோவணமாய்க் கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

பிறகு, இருவரும் நிதானமாய்த் தவழ்ந்து மேலே சமதளத்திற்கு வந்தனர்.

மேலே வந்ததும், முரளியைக் கட்டிக் கொண்டு கதறினான் தனசேகர்.  “முரளி...நீ மட்டும் இல்லேன்னா...நான் சேத்துல மூழ்கி செத்தே போயிருப்பேன்டா!...இந்த நன்றியை நான் என் உயிருள்ள வரைக்கும் மறக்கவே மாட்டேண்டா!...”

“டேய்..டேய்...ஏண்டா இதுக்குப் போய் இவ்வளவு உணர்ச்சி வசப்படறே?..இது வரைக்கும் நீ எனக்குச் செஞ்ச உதவிகளுக்கு நான் எந்தவொரு கைம்மாறும் செய்ததில்லை!...ஏதோ இந்த வகையிலாவது செய்ய முடிஞ்சதே?ன்னு நான் சந்தோஷப்பட்டுட்டிருக்கேன்!” என்றான் முரளி.

அப்போது முரளியின் அடி வயிற்றைப் பார்த்த தனசேகர் அலறிவிட்டான்.  முட்செடிகள் ஏகமாகக் கீறி விட்டதில் பெரிய ரத்தக் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

*****

ன் தலையைச் சிலுப்பி சுய நினைவுக்கு மீண்ட முரளி, “யப்பா...இப்ப நெனைச்சா பயமாயிருக்குடா!...அப்ப எப்படி தைரியமாய்ச் செய்தே?ன்னு ஆச்சரியமாயிருக்கு” என்றான்.

“டேய்...முரளி...இந்த விஷயம்...நம்ம ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்குமே தெரியாது!...அதனாலதான் மத்தவங்கெல்லாம் நம்ம நட்பை வித்தியாசமாய்ப் பார்க்கறாங்க!...நான் ஒண்ணு கேட்கறேன்...அன்னிக்கு மட்டும் நீ பயந்து போய் என்னை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.