வாசலினின்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே கதவை திறந்துகொண்டு அவள் முன்னால் வந்து நின்றான் ஜனா.
ஆனால் கதவை தட்டுவதற்காக கதவின் மீது தன் கையை வைப்பதற்காக ஜனனி கையை நீட்டி இருக்க அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக ஜனா கதவை திறக்க கதவின் மீது வைக்க வேண்டிய கை ஜனாவின் நெஞ்சின் மீது பதிந்தது.
முதன்முறையாக ஆடவனை தொட்டு விட்டதால் ஏற்பட்ட அச்சமா? அல்லது மற்றொரு பெண்ணின் நேசிக்கும் ஆடவனின் மீது ஆசை கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பா? அல்லது நேசிக்கும் தன்னவனை முதல் முறையாக தொட்டதால் ஏற்பட்ட இன்ப அவஸ்தையை? எதுவென்று ஜனனிக்கு புரியவில்லை ஆனால் அவனை தொட்ட அடுத்த நொடி அவளுக்குள் பலவிதமான உணர்வுகள் மீண்டு எழ.... அனைத்தையும் தனக்குள் புதைத்து கொண்டு ஆபிசுக்கு நேரம் ஆகி விட்டது....
அ.... அதா... அதான் கூப்பிட வந்தேன் என்று தட்டுத்தடுமாறி சொல்லி அவள் அவன் முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.
ஜனாவிற்கோ அவள் கை பட்ட நொடி 1000 வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. ஒரு நிமிடம் ஏற்பட்ட அந்த அனுபவம் ஆயுளுக்கும் வேண்டும் என்று மனம் முறையிட அவன் உடலோ மீண்டும் ஒரு தொடுகை கிடைக்காதா என்று ஏங்கியது...
சில நொடிகளில் தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டவன் ஜனனியை அழைத்துக் கொண்டு ஆபிஸ் சென்றான்.
அதன் பின் வந்த நாட்களில் ஜனா மொத்தமாக மாறி போய் இருந்தான். வீட்டில் இருக்கும் போது தனியாக நேரத்தை செலவிடாமல் தனு ஜனனியுடன் நேரத்தை செலவிட்டான்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனதில் இருப்பதை மறைமுகமாக ஜனனிக்கு உணர்த்தினான்.
அவ்வப்போது அவளை சீண்டுவது தனுவை கொஞ்சுவது போல ஜனனியிடம் கொஞ்சுவது கெஞ்சுவது இயல்பாக அமர்வது போல நெருங்கி அமர்வது பட்டும் படாமலும் தொடுவது என்று நாட்கள் நகர அஸ்விட் ஸ்வீனா கல்யாண நாளும் வந்தது.
எத்தனை நாளாக எதிர்பார்த்த நாளல்லவா... திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணம் நடந்த சில நாட்களில் புதுமணத் தம்பதியர் தேநிலவிற்காக வெளி நாடு சென்று விட்டனர்.
ஸ்வீனா அஸ்விட் இருவரும் இணைந்து தொடங்கிய புது பிஸினஸையும் ஜனா சேர்த்து பார்த்து கொள்ள வேண்டியதிருந்ததால் அதிக நேரம் ஆபிஸில் செலவிட்டான்.
அதனால் தனுவை பள்ளியில் இருந்து அழைத்து வரும் பொறுப்பை ஜனனி ஏற்றுக்