இருக்கும் தன் காதல் மனைவி அந்த நயவஞ்சகயிடம் சிக்கி ஏதாவது பிரச்சினையை சந்தித்து விடக்கூடாதே என்று அவன் மனம் அதிகமாக பதைபதைக்க தொடங்கியது.
அந்த ஒருத்தியால் தானே குடும்பத்தை இழந்து நிற்கிறான்.... உறவுகளை இழந்து நிற்கும் வலி அவனுக்கு அல்லவா தெரியும்.... அந்த வலி... அந்த வலி.... இப்போது நினைக்கும் போதே நெஞ்சம் பதை பதைத்தது. நேராக சென்று பார்த்து விடலாமா என்று ஒரு புறம் மனம் யோசித்தது. மற்றொரு புறமோ அவன் மனம் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும். உன் செல்லில் இருக்கும் அவளது நம்பருக்கு ஒரு அழைப்பு விட்டு கேட்டு விட்டால் போதுமே என்று சொல்ல அதற்கும் அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை.
வேகமாக யாருக்கோ அழைத்தான். ஜனனி அங்கு இருக்கிறாளா என்று கேட்க எதிர் முனை கூடிய பதிலால் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. அப்படி என்றால் ஜனனி எங்கு சென்று இருப்பாள். அவள் அதான் அந்த கொடூர ராட்சசி வீட்டில்தான் இருக்கிறாள். அப்படி என்றால் ஜனனி எங்கு சென்றிருப்பாள் என்று மீண்டும் யோசிக்க தொடங்கினான்.
என்ன செய்வது என்று தெரியாமல் மூன்றாவது மாடியில் இருந்த தன் அறையில் இருந்த ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி விட்டு ஆபீஸ் என்ட்ரன்ஸ் கேட்டையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ஜனா.
அந்த நேரத்தில அஸ்விட்ன் கார் ஆபீஸில் நுழைவதைப் பார்த்ததும் அவன் மனதில் பதட்டம் ஏனோ சற்று குறைந்தது. அஸ்விட்டிடம் பேசி ஜனனி எங்கே இருக்கிறாள் என்று கேட்க சொல்லலாம் என்று அவன் நினைக்கும் பொழுதே கார் ஆபிஸ் நுழைவு வாசலிலேயே நின்றுவிட்டது.
இவன் ஏன் உள்ளே வராமல் காரை அங்கேயே நிறுத்திக் கொண்டு நிற்கிறான் என்று அவன் யோசித்துக் கொண்டே பார்க்க காரின் கதவை திறந்து இறங்கினாள் ஜனனி.
ஜனனியை பார்த்த பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஆனாலும் ஒரு பக்கம் கோபமாக வந்தது. ஒரு வேளை இவனைப் பார்க்க தான் சென்றாள் என்றால் என்னிடம் சொல்லி விட்டு சென்றிருக்கலாமே
என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே கார் கதவின் ஜன்னல் வழியாக குனிந்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டே நின்றாள் ஜனனி.
அவள் பேசியது ஒரு நிமிடம் கூட இருக்காது என்றாலும் ஏனோ ஜனாவிற்கு பொறாமையாக இருந்தது. அவனிடம் மட்டும் எப்படி பேசுகிறாள். ஸ்வேதாவிடம் பேசும்பொழுதும் தனுவிடம் பேசும் பொழுதும் அவள் முகத்தில் தெரியும் அந்த பளிச் பளிச் வெளிச்சத்திற்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது.