ஜனாவிற்கு கோபமாக வந்தது. மற்றவர்களிடம் சிரித்து சிரித்து பேசுபவள் தன்னிடம் சிரித்து பேச வில்லை என்றாலும் முகத்திலாவது இந்த கடுமையை சற்று குறைத்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது.
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த ஜனனி அவனிடம் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல கேட்டாள் ஜனனி.
ஒரு நொடி திகைத்து விழித்தவன் பதிலேதும் சொல்லாமல் தன் கணினியின் திரையில் தன் கவனத்தை பதித்துக் கொண்டான்.
அறையிலிருந்து வெளியேறுவதற்காக வெளியே வர கதவை திறந்தவள் பாதி திறந்த நிலையில் இருந்த கதவில் நின்று கொண்டு தன் முகத்தை மட்டும் உள்ளே நீட்டி இன்னைக்கு லஞ்ச் எடுத்துட்டு வரல... அதானால் வெளியில லஞ்ச்க்கு வெளியே போகலாம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
ஜனாவிற்கு யோசனையாக இருந்தது. லஞ்ச் எடுத்து வரவில்லையா??? ஆனால் காலையிலேயே அவசரஅவசரமாக எல்லாருக்கும் பேக் செய்தாலே... இப்பொழுது லஞ்ச் எடுத்து வரவில்லை என்று சொல்லுகிறாளே... என்ன ஆச்சு? என்ன நடந்திருக்கும்?... என்று யோசித்துக்கொண்டே இருக்கும் போது அவனுக்கு கால் வந்ததன் அறிகுறியாக ஜனாவின் செல்போன் அலறியது.
அழைப்பது அஸ்வித் என்று தெரிந்ததும் அவன் முகத்தில் இருந்த அத்தனை கேள்விகளும் மறைந்து சற்று ஒரு கோபம் வந்து ஒட்டிக்கொண்டது...
ஹலோ என்றான் ஜனா
அந்த ஹலோ என்ற ஒற்றை வார்த்தையிலேயே அஸ்வித் மறுமுனையிலிருந்து என்ன ஆச்சு ஏன் கோபமா இருக்கிற என்றான்.
நானா... நான் ஏன் கோபமாக இருக்கிறேன்.. நல்லா தான் இருக்கிறேன்... என்ன விஷயம் சொல் என்றான் பட்டும் படாமலும்...
ஒரு நொடி பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான் அஸ்விட். அதில் அவன் மனம் இவனுக்கு என்ன ஆயிற்று... ஏன் இப்படி இருக்கிறான் என்று யோசிக்கும் போதே அவனுக்கு காலையில் ஜனனியை சந்தித்த நினைவு வந்தது. ஒரு வேளை ஜனனியிடம் சொன்னதற்காக கோபத்தில் இருக்கிறானோ என்று யோசித்தவன் எதையும் யோசிக்காமல் என்னாச்சு ஏன் கோபமா இருக்க... ஜனனி ஏதாவது சொன்னாளா... நான் ஜனனி கிட்ட பேசினதில் உனக்கு ஏதாவது கோபமா என்றான் சற்று மெல்லிய குரலில்...
அவளிடம் சிரித்து பேசுவதை நான் தவறாக எண்ணி விட்டேன் என்று எண்ணி விட்டானோ என்று வேறு விதமாக எண்ணிக்கொண்டு அப்படி எல்லாம் இல்ல... அவளிடம் நீ பேசுவதற்கு