Chillzee Classics - புயலுக்குப் பின்... - 25 - பிந்து வினோத்
திங்கள் காலையில் ஆனந்தி சாந்திக்கு போன் செய்தாள். பத்து, பதினோரு மணி அளவில் அவர்களின் ரிட் மெனு எடுத்துக் கொள்ளப் படும், எனவே சாந்தி அதற்கு முன் கோர்ட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னாள். கூடவே,
"மேடம், சேகர் சார் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல சொன்னார்..." என்று தொடங்கினாள்.
"சொல்லுங்க ஆனந்தி... சார் என்ன சொன்னார்?"
"இப்படி சுந்தர் மாதிரியான ஆளுங்க கிட்ட ரொம்ப பகைச்சுக்கிறது நல்லது இல்லை... அதனால முடிஞ்ச அளவில நாம எந்த பிரச்சனையும் இல்லாமல் நம்ம காரியத்தை சாதிச்சுக்கிறது நல்லதுன்னு சொல்ல சொன்னார்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனந்தி சொன்ன நேரத்திற்கு கோர்ட்டை வந்து அடைந்தாள் சாந்தி. முதல் முறையாக அருணா இல்லாது தனியாக வந்திருந்தாள்.
கோர்ட்டில் கூட்டம் அலை மோதியது.