(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 16 - முகில் தினகரன்

கே.பி.எஸ்.லாரி டிரான்ஸ்போர்ட்.

“தங்கவேலு...உன்னையை முதலாளி கூப்பிடறாரு” என்று சக டிரைவர் சொல்ல, லாரியைக் கழுவிக் கொண்டிருந்த தங்கவேலு, அதை அப்படியே விட்டுவிட்டு முதலாளியின் அறைக்குச் சென்றார்.

“கூப்பிட்டீங்களா முதலாளி?”

“ஆமாம் தங்கவேலு!...இங்க சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டிலிருந்து...ஒரு மெஷினை ஏத்திட்டுப் போய்...சூடாமணி ரைஸ் மில்லில் டெலிவரி குடுக்கணும்!...நான் நம்ம கோவிந்தன் லாரியைத்தான் அலாட் பண்ணியிருந்தேன்!...இப்ப திடீர்னு கோவிந்தன் போன் பண்ணி  “உடம்பு சரியில்லை...என்னால் இந்த லோடு அடிக்க முடியாது முதலாளி”ன்னு சொல்றான்!...அதான் என்ன பண்றது?ன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கேன்!” என்றார் டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்து.

“இதுல முழிக்கறதுக்கு என்ன முதலாளி இருக்கு?...கோவிந்தன் இல்லேன்னா என்ன?...நான் இருக்கேனல்ல?...நான் போயிட்டு வர்றேன்” என்றார் தங்கவேலு.

“ரொம்ப சந்தோஷம் தங்கவேலு” என்றார் சிங்கமுத்து.

அந்த திடீர் டிரிப் கடைசி நேரத்தில் ஏற்பாடானதால், வீட்டில் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அன்று மதியமே புறப்பட்டார் தங்கவேலு.

ஏற்கனவே வந்து போய் வந்த பாதைதான் என்றதால், எளிதாகவே சென்று, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே மெஷினை டெலிவரி கொடுத்தார் தங்கவேலு.

மகிழ்ந்து போன ரைஸ் மில் முதலாளி வாடகைப் பணத்தைக் கொடுக்கும் போது, ஒரு ஐநூறு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தார்.  “இது உனக்குப்பா...டிப்ஸ்”

“இல்லைங்க அய்யா...இதையும் நான் எங்க முதலாளியிடம்தான் தருவேன்!...டிப்ஸ் பணமும் எங்க முதலாளிக்கு உரியதே” என்றார் தங்கவேலு.

புருவங்களை உயர்த்திய ரைஸ் மில் முதலாளி, “ம்ம்ம்... “கோயமுத்தூர்க்காரங்க...நேர்மையானவங்க”ன்னு கேள்விப்பட்டிருக்கேன்!...இன்னிக்கு நேரிலேயே பார்த்திட்டேன்!...சந்தோஷமா போயிட்டு வாப்பா!” என்று வழியனுப்பி வைத்தார்.

அவர் கொடுத்த பணத்தை வாங்கி பர்ஸினுள் வைத்து, “பம்”மென்று உப்பிப்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.