சொன்னே?” அவன் தோளைத் தொட்டுக் கேட்டார் தங்கவேலு.
“தனசேகர்” என்றான் அவன்.
“இதே ஊரா தம்பி?”
“ஆமாம் சார்” என்றவனின் கைகளைப் பற்றி, “நீ செஞ்ச உதவிக்கு ஏதாவது கைம்மாறு செய்யணும் போலிருக்கு!...பணம் கொடுத்தா அது...வேற மாதிரி ஆயிடும்!” என்றபடி யோசித்த தங்கவேலு,
“சொல்லுப்பா...என்ன வேணும் உனக்கு?” கேட்டார்.
“ஒண்ணும் வேண்டாம் சார்!...பார்த்து பத்திரமா ஊர் போய்ச் சேருங்க!...அது போதும்” என்றவனிடம் அவன் பெற்றோர்...குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு,
“அடுத்த முறை இந்த ஊருக்கு வரும் போது நிச்சயம் உன்னை வந்து பார்க்கிறேன் தம்பி” சொல்லி விட்டு, மறுபடியும் ஒரு முறை நன்றி சொல்லி விட்டு லாரியில் ஏறினார்.
லாரி கிளம்பி அவனைத் தாண்டிச் செல்லும் போது “டாட்டா” காட்டிய தனசேகரின் கண்களில் அப்போதுதான் அது பட்டது.
ஒரு கணம் திகைத்துப் போனான்.
அடுத்த நிமிடமே பைக்கை ஸ்டார்ட் செய்து மீண்டும் லாரியை விரட்டினான்.
தொடரும்