“ரொம்ப தேங்கஸ்”
“அப்புறம் . . . அது வந்து என் பையன் வேற வேலைக்கு டிரை பண்றான். அதனால இப்போ கல்யாணம் வேண்டாமாம். சாரி” என மென்று முழங்கினார்.
“ஐயோ . . . பெரிய வார்த்தை எல்லாம் எதுக்குங்க? . . . என் பொண்ணும் மேல படிக்கணும் கல்யாணம் வேண்டாம்னு சொல்றா. . . என்ன செய்றது? . . . நம்ம கையில எதுவுமில்ல . . . விடுங்க நாம நண்பர்களா இருப்போம்.” நாரதர் நட்புடன் பேசினார்.
“சரி இனி நாம பிரெண்ட்ஸ் . . . முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா” எனச் சிரித்தார் விசு.
கலவையான உணர்வுகள் மனதில் ஓடியது. மனதை ஒருநிலைப்படுத்திப் பேசினார் விசு.
“உங்க வாட்ஸ்அப்க்கு சில செய்தி அனுப்பியிருக்கேன் பாருங்க. அதெல்லாம் பத்திரிக்கை தொடங்கின சமயம் வந்தது.” என்றார் நாரதர்.
இன்னும் பத்து நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தார் விசு. அவருக்கு நல்ல வரன் கைநழுவிப் போனதில் வருத்தம். ராகவன் வாழ்க்கையை எண்ணி மனம் கலங்கியது.
தற்செயலாக ராகவன் அறையை கடக்கையில் கப்போர்டில் அதன் கீ செயின் ஊஞ்சாலடிது. அதைப் பார்த்த விசுவுக்கு மகிழ்ச்சியும் குழப்பமும் ஒருசேர உழன்றது. காரணம் அந்த கீசெயின் சிகப்பு ஆர்டின் வடிவத்தில் உள்ளே “லவ் யூ“ என்னும் ஆங்கில வார்த்தை இருந்தது.
அவனின் கீசெயின் எப்போதும் புட்பால் கிட்டார் என்றபடி இருக்கும்.