“நீங்கதான் கல்யாணம் பண்ணிக்கனு வற்புறுத்தினீங்க . . . இப்போ சரின்னா . . . இப்படி பேசறீங்க”
“நீதான் பத்துநாள் முன்ன கல்யாணம் வேண்டாம்னு சொன்னியே”
“ஆமா அது பத்துநாள் முன்ன . . . ஆனா இன்னிக்கு ஓகே” என்றான்.
முறைத்தவர் “மிஸ்டர் ராகவன் . . . அப்போ நாளைக்கு என்ன சொல்வீங்க?” என தன் பாணியில் கேட்டார்.
“அப்பா” என அலுத்துக் கொண்டான்
“இன்னிக்கு காலைல நாரதருக்கு போன் செஞ்சி . . . பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டேன்” விசு சொல்ல
இதைக் கேட்ட கோதாவரியும் ராகவனும் “ஏன் இப்படி செஞ்சீங்க?” என ஒருசேர அலறினார்கள்.
“அடியே கோதாவரி நீதான நேத்து சொன்ன . . . நாரதருக்கு வேண்டாம்னு சொல்லுங்க . . பாவம் வேற வரன் பார்க்கட்டும்னு” விசு வாதாடி போராடி தன் பக்க நியாயத்தை நிரூபித்தார்.
கோதாவரி முழித்தபடி கப்சிப்
“வேற வரன் பார்க்கலாம்” விசு முடிவாக சொல்லி பஞ்சாயத்துக்கு தீர்பளித்தார்.
ராகவன் “எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது பத்மினியோட மட்டும்தான்” . . . நாட்டாமை தீர்ப்ப மாத்து என்னும் வகையில் சொல்ல