“பப்பி கல்யாணம் விளையாட்டு இல்லமா” நிதானமாக நாரதர் இடையே புகுந்தார்.
“தெரியும்பா . . நான் சீரியசாதான் சொல்றேன்” என்றாள் திடமாக
காலையில் விசு போன் செய்ததை மகளிடம் கூறினார்.
“என்னை மாதிரி அவங்களும் மனசு மாரி இருக்கலாம் நீங்க போன் பண்ணுங்க” என்றாள்.
போன் செய்து என்னவென்று பேசுவது என தயக்கம் நாரதருக்கு. ஆனால் மகளின் முடிவில் ஒருவித திருப்தி. உண்மையில் மகளுக்கு திருமணத்தில் விருப்பமா அல்லது அலமேலு கட்டாயப்படுத்தினாளா? என சந்தேகம் துளிர்விட
“அலமேலு இதெல்லாம் உன் வேலையா?” என கடுமையாக கேட்டார்.
“நான் சொன்னதும் அப்படியே உங்க செல்ல மகள் கேட்டுட போறாளாக்கும்” என மனதில் நினைத்தவர் “இல்லங்க . . நான் எதுவும் பேசல” என்றார்.
“அப்பா இது என்னோட சொந்த முடிவு . . யாரும் நிர்பந்தம் படுத்தல” என்றாள்.
நாரதர் விசுவிற்கு போன் செய்தார். அதே சமயம் விசுவும் நாரதருக்கு போன் செய்தார்.
இருவரும் தம்தம் குடும்பத்தினரிடம் “ போன் என்கேஜ்டு” என்றனர்.
ராகவனும் பத்மினியும் ஒரே மாதிரி சிந்திப்பவர் ஆயிற்றே “லேண்ட்