லைனுக்கு கால் பண்ணுங்க” என்றனர்.
இரு தந்தையரும் தங்கள் செல்வங்கள் சொன்னதை செய்தனர். நல்லவேளையாக நாரதர் முந்திக் கொண்டார்.
“ஹலோ நாரதர் பேசறேன்”
“சொல்லுங்க” என மனம் நிறைந்த மகிழ்ச்சியில் விசு
‘வாட்ஸ்அப் மெசேஜ் பாத்திங்களா?” என தொடங்கினார்.
அடுத்த இரண்டு நிமிடம் அப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவரை மனதளவில் இருவரும் சுற்றி வந்தனர்.
இறுதியாக “என் பையனுக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்” விசு சொல்லிவிட்டார்.
இதற்கு நாரதர் என்ன சொல்வார் என பரிட்சை ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவன் போல விசு டென்ஷன் ஆனார்.
“என் பொண்ணுக்கும் கல்யாணத்துல சம்மதம்” என நாரதர் பதில் சொன்னதும்.
“ஆமா இனி நாம பிரெண்ட்ஸ் கிடையாது” விசு சிரிப்போட சொல்ல
நாரதர் ”ஆமா சம்மந்தி” என வாய்நிறைய விசுவை கூப்பிட்டார்.
இரு பெற்றோரும் நெகிழ்ந்தனர். இவர்களுக்கு தெரியாது ராகவனும் பத்மினியும் இந்த பத்து நாட்களில் இருமுறை சந்தித்தனர். தங்கள் வாழ்க்கையை குறித்து மிகப் பெரிய முடிவை எடுத்துள்ளனர் என்று.