காத்திட்டிருக்காங்க” என்றான் தனசேகர்.
முரளி தங்கவேலுவைப் பார்க்க, அவர், “முரளி...உன் நண்பனோட குடும்ப வாழ்க்கை சந்தோஷமா...நிறைவா இருக்கணும்!னு நீ நினைச்சா உடனே அவன் கூட கிளம்பிப் போ!...அவன் விருப்பப்படி அங்கியே இரு...அதுதான் நியாயம்” என்றார்.
முரளியின் தாயார் ராக்கம்மாவும், அவன் தங்கை வசந்தியும் அதையே சொல்ல, முரளி இறங்கி வந்தான். “த பாரு சேகர்...சொன்ன வார்த்தை மாறக் கூடாது!...அங்க போனதும் முதல் வேலையா உன் மாமனார் வீட்டுக்குப் போய் உன் மனைவியைக் கூட்டிட்டு வந்து அவ கூட குடித்தனம் நடத்தணும்!...என்ன?”
“நிச்சயமா”என்றான் தனசேகர்.
மறுநாள் காலை, டிரான்ஸ்போர்ட் முதலாளியிடமும், அவரது மனைவி ஜெதாம்பாளிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, மீண்டும் சொந்த ஊரை நோக்கிப் படையெடுத்தது முரளியின் குடும்பம்.
“தங்கவேலு...உன்னோட லாரியிலேயே அவங்க சாமான்களையெல்லாம் எடுத்திட்டு...அவங்களையும் ஏத்திக்கிட்டுப் போய் அவங்க ஊர்ல இறக்கி விட்டுட்டு வா!...” என்றார் முதலாளி சிங்கமுத்து.
மறக்காமல் தனசேகரின் பைக்கையும் லாரியில் ஏற்றிக் கொண்டார் தங்கவேலு.
சொந்த ஊரில் அவர்களை எதிர் நோக்கியிருக்கும் விபரீதம் பற்றி கிஞ்சித்தும் தெரியாமல் சந்தோஷமாய்ப் பயணித்தனர் அவர்களனைவரும்.
தொடரும்