(Reading time: 6 - 11 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 22 - முகில் தினகரன்

ந்த லாரி ஊருக்குள் நுழைந்து முரளி முன்பு குடியிருந்த அதே வீட்டின் முன் நிற்க, குதித்திறங்கிச் சென்ற முரளி அந்த வீட்டில் தற்போது வேறு யாரோ குடியிருப்பதைக் கண்டு சோகமாய்த் திரும்பி வந்தான்.

  

“என்ன முரளி...என்னாச்சு?” தங்கவேலு கேட்க,

  

“வீட்டுல இப்ப வேற குடி வந்திடுச்சு சார்” என்றான் வருத்த முகத்துடன்.

  

“அதனாலென்ன?...எல்லோரும் எங்க வீட்டுக்குப் போவோம்...அங்க இருங்க” தாராளமாய்ச் சொன்னான் தனசேகர்.

  

முரளி அவனை வினோதமாய்ப் பார்க்க, “டேய்...இப்ப அங்க எல்லாமே மாறிடுச்சு...நீ வந்து பாரு அங்க உனக்குக் கிடைக்கற மரியாதையே வேற” என்றான் தனசேகர்.

  

ஆனாலும் முரளி தயங்க, தங்கவேலு தைரியமூட்டினார். “அதான் தனசேகர் இவ்வளவு நம்பிக்கையாய்ச் சொல்றான் அல்ல?...போய்த்தான் பார்ப்போமே?” என்றார்.

  

எல்லோரையும் ஏற்றிக் கொண்டு அந்த லாரி தனசேகரின் வீட்டை நோக்கிச் சென்றது.

  

தனசேகர் வீட்டின் பெரிய கேட்டிற்குள் லாரி நுழையும் போது அந்த சொக்கு அங்கே நின்று கத்திக் கொண்டிருந்தான். “என்னமோ...சிநேகிதகாரன்தான் பெருசு”ன்னு சொல்லி உங்க மகன் என்னோட அக்கா மகளை ஒதுக்கி வெச்சிட்டானாம்!...என்னய்யா அசிங்கம் இது?”

  

“த பாருப்பா...அதைப் பற்றியெல்லாம் நாங்களும்...அவங்களும் பேசிட்டோம்...நீ எதுக்கு ஊடால வந்து குறுக்கு சால் ஓட்டறே?” பொன்னுரங்கம் கேட்க,

  

“நான் ஒண்ணும் குறுக்கு சால் ஓட்டலை...உங்க மகன் தான் என் வயல்ல வந்து குறுக்கு சால் ஓட்டிட்டான்” என்றான் சொக்கு.

  

பொன்னுரங்கம் அவன் என்ன சொல்கிறான்? என்று புரியாமல் அவன் முகத்தைக் கூர்ந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.