தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 08 - சுபஸ்ரீ
தனுஷ் மற்றும் சஞ்சய் பிருந்தாவை சந்தித்துவிட்டு வீட்டின்னுள் நுழைந்ததும், கண்களை உருட்டியடி தாத்தா தனுசை முறைத்தார்.
“தனுஷ் நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் . . போய் டிரஸ் மாத்திட்டு ரிலாக்சா பத்து நிமிஷம் கழிச்சி வா” என கட்டளையைப் போல சொன்னார்.
“யூவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்” என தாத்தா சொன்ன நேரத்திற்கு சஞ்சய் தனுசை பார்த்து கண்ணடித்தான்.
வீட்டிற்கு வரும் வழியிலேயே தனுஷ் பிரச்சனையை சஞ்சயிடம் கூறியிருந்தான். அதனால் இருவருக்கும் இது பெரியதாக இல்லை.
சமையலறை மேடையில் அமர்ந்தபடி கிண்டலாக “என்னவாம் பெருசுக்கு?” தன் அம்மா சாந்தியின் காதை கடித்தான் சஞ்சய்.
“பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா” என கண்டித்தார் சாந்தி.
“பெரியவங்க பெரிய மனசோட இருந்தா சரி . . ”
தனுஷ் தன் அறைக்கு சென்றதும் “ சரி சரி பேசாம சாப்பிட உட்காரு ” என அம்மா சஞ்சையிடம் கூற . . .
“யம்மா எத்தனவாட்டி சாப்பிடறது . . ” என தன் வயிற்றில் மேளம் அடிப்பது போல பாவணை செய்தவன். தானும் தனுஷ் உடன் சென்றதை கூறினான்.
“ஏண்டா அவங்க ரெண்டு பேரும் எதாவது தனியா பேச வேண்டியிருக்கும் . . நீ எதுக்கு நடுல ஹனுமார் மாதிரி” அப்பா கடிந்தார்.
“அப்பா இது டூ த்ரீ மச் . . நான் ஹனுமாரா? உங்க சீமந்த புத்திரன் தனுஷ்தான் என்னை கட்டாயபடுத்தி கடத்திட்டு போனான் தெரியுமா? . . அவனை கேட்டு பாருங்க” என