முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான்.
“ஏங்க குழந்தைய இப்படி சொல்றீங்க . . ராத்திரி சுத்திபோடணும் இவனுக்கு . .”
“நான் அப்படி சொல்லடி” என அப்பா சமாளிக்க
“உங்க அப்பாக்கு சேவகம் செய்யணும்ல போங்க” என சஞ்சய் தன் அப்பாவை வழியனுப்பி வைத்தான்.
“உனக்கு பிடிக்குமேனு அரிசி அப்பளம் பொரிச்சேன்” என அம்மா சொல்ல
“சரி ஆசைக்கு ஒண்ணே ஒண்ணு கொடுங்க”என்றான்.
“டேய் இப்பதானே ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு வந்தேனு சொன்ன . . அம்மா அப்பளத்தை கொடுத்தவாரு கேட்டார்.
“சந்தோஷமா இருக்கும் போது நிறைய பசிக்குமாம் ம்மா”
“அப்படியா இப்ப என்ன சந்தோஷமான செய்தி?” அம்மா ஆவலாக கேட்க.
“இப்ப தாத்தா போலிங் போடுவாரு . . தனுஷ் பிரோ, சும்மா லெப்ட் ரைட்டுனு சிக்சர் அடிபார் . . ஒரு ப்ரீ ஹிட் கூட கிடைக்கும் பாருங்களேன்”
“என்னடா சொல்ற? மாமா வேற கோபமா இருக்கார்” அம்மா கவலையாக வினவ
சஞ்சய் வேண்டுமென்றே டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டு “அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ” என சத்தமாக பாடியவண்ணம் அப்பளத்தை இரண்டாக சத்தமாக உடைத்தான். தாத்தா உர்ரென்று சஞ்சையை முறைத்தார்.
தனுஷ் தாத்தா முன் பவ்யமாக அமர்ந்து “சொல்லுங்க தாத்தா” என்றான்.