கடவுளே அவன் பழனி என சொல்லிவிடக் கூடாது என வேண்டினான்.
“பழனி சார்” என்ற விமலின் பதில் தனுஷிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
இவன் என்றுமே தாத்தாவை சந்திக்கக் கூடாது என தனுஷ் எண்ணினான். இவன் தம்பி சஞ்சயாக இல்லாமலும் இருக்கலாம் ஆனாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கணக்கு போட்டது மனம்.
“சார் நாளைக்கு உங்க தாத்தாவையும் அப்பாவையும் பார்த்து பத்திரிக்கை கொடுக்கலாம்னு இருக்கேன்” என்றான் விமல்.
இதைக் கேட்டு தனுஷ் அதிர்ந்தாலும் வெளிக்காட்டவில்லை. “நீ என் தாத்தாவை சந்திக்க கூடாது விடவும் மாட்டேன்” என தனுஷ் மைண்ட்வாய்ஸ் கர்ஜித்தது. ஆனால் “கண்டிப்பா பாரு” என்றான் புன்னகை மாறாமல்.
பத்திரிக்கையில் குறிப்பிட்ட திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு. என மனதில் குறித்துக் கொண்டான். “எங்க இருந்துதான் இப்படி டிசைன் டிசைனா பிரச்சனை கிளம்புதோ?” என எரிச்சல் எழுந்தது.
இதை யாருடனும் கலந்து ஆலோசிக்கவும் முடியாது. தானே இதை முடிக்க வேண்டும் என தனுஷ் முடிவு செய்தான்.
வானவில் வளையும் . . .