எனக்கிருக்க அன்பும் அபிமானமும் தான் காரணம்...”
மனோஜ் அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்.
“மனோஜ்...” என்று மஞ்சு சிணுங்கவும்... அவளுக்கு பதில் சொல்ல மனோஜ் வாய் திறந்த நேரம்,
“மஞ்சு, நீ பழத்தை எல்லாம் எடுத்து வச்சுட்டியா??” என்றுக் கேட்டுக் கொண்டு வினோதினி அங்கே வந்தாள்...
வந்தப் பிறகே மனோஜும் அங்கே இருப்பதும், அவர்கள் இருவரும் நிற்கும் நிலையையும் கவனித்தாள்.... கவனித்து திகைத்து நின்றாள்...!!!!
மனோஜும் மஞ்சுவும் அவசரமாக விலகி நின்றார்கள்....
முகத்தில் டன் டன்னாக அசடு வழிய,
“சாரி அண்ணி... மஞ்சுக்கு ஹெல்ப் வேணுமான்னு கேட்டுட்டு இருந்தேன்... ஹி ஹி...” என்று வாய்க்கு வந்ததை உளறி விட்டு மஞ்சுவை பார்த்து விழி விரித்து விடைப் பெற்று சென்றான் மனோஜ்.
மனோஜைப் போலவே விழித்துக் கொண்டிருந்த மஞ்சுவைப் பார்த்து வினோதினிக்கு சிரிப்பு வந்தது... ஆனால் அதற்கு மேலே மஞ்சுவிடம் எதுவும் கேட்காமல், தட்டுகளில் பழங்களை அடுக்கத் தொடங்கினாள்...
மஞ்சுவும் அவளுடன் இணைந்துக் கொண்டாள்... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை புரிந்தார்களே தவிர வேறு எதையும் அப்போதைக்கு பேசிக் கொள்ளவில்லை...
அன்றைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி இனிதாக நடைப்பெற்றது... ஜோதியும் கார்த்திக்கும் அருகருகே நின்றப் போது கிட்டத்தட்ட அனைவருமே அவர்கள் சரியான ஜோடி என சொல்லும் அளவிற்கு ஜோடி பொறுத்தம் இருந்தது...