"ஹேய் குட்டி சாத்தான், இந்த போட்டுக் கொடுக்குற வேலையை விட்டுட்டு ஏதாவது புக்கை எடுத்து படி!"
"படிச்சு என்ன ஆகப் போகுது டாடி? நான் உங்களுக்கு ஒரே பொண்ணு காசு கொடுத்து பிடிச்ச காலேஜில சீட் வாங்கிட மாட்டீங்க"
"ஹேய்! யார் கிட்ட லஞ்சம் கொடுக்குறதை பத்தி பேசுற? நான் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி!"
"போதும் போதும் பழைய பல்லவியை ஆரம்பிக்காதீங்க!" என்றாள் சத்யா அலுப்புடன்.
"சத்யா??? உனக்கும் இது பழைய பல்லவியா?"
"வேறென்ன சொல்ல? இத்தனை வருஷம் பரவாயில்லை! நம்ம பொண்ணுக்கு எட்டு வயசாகுது. நீங்க இப்படியே இருந்தா என்ன செய்றது? அவ படிப்பை பத்தி யோசிக்க வேண்டாமா? இது வரைக்கும் அஞ்சு ஸ்கூல் மாத்தி இருக்கோம், அவ பிறந்த அப்புறமே பத்து ஊரு மாறி இருக்கோம்"
"புரியுது சத்யா, என்னால சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்ய முடியலை. காக்கி சட்டை எனக்கு கடவுள் போல"
"எனக்கும் புரியுதுங்க! இது வரைக்கும் இருந்த சிட்டி போல இல்லாம இந்த மதியூர் மாவட்டதில இருக்குறது எல்லாம் கிராமம். நம்ம பொண்ணு ஸ்கூல் முடிக்குற வரைக்குமாவது இங்கேயே இருக்க பாருங்க"
"கிராமத்துல தங்கி இருக்குறது உனக்கு ஓகேவா?"
"கிராம வாழக்கை போல அமைதியான வாழ்க்கை இருக்கா என்ன? இங்கே குற்றங்களும் ரொம்ப கம்மி!"