தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 26 - நவ்யா
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்,
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்,
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்,
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்,
இது எப்படி எப்படி நியாயம்,
எல்லாம் காதல் செய்த மாயம்!
ஜனனியின் உதடுகள் அதே பாடலை மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு எப்போதுமே காதல் மீது அதீத நம்பிக்கை இருந்தது. உண்மை அன்பு மட்டுமே இரண்டு ஜீவன்களை இணைக்க முடியும் என்று அவள் திடமாக நம்பினாள். பழைய காலம், புதிய காலம், தொழில் நுட்பக் காலம் என எந்தக் காலத்திலும் மனித உறவுகள் நிலைக்க தேவையானது அன்பும், பாசமும் மட்டும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறுத்துவதுப் போல பொறுமையாக யோசித்தாள். கண்ணை மூடிக் கொண்டு அப்யூசிவ் உறவுகளில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களை அவள் பார்த்திருக்கிறாள், சந்தித்திருக்கிறாள், அதில் இருந்து அவர்கள் வெளி வர உதவவும் செய்திருக்கிறாள்.
உமேஷ் அதுப் போல எமோஷனல் ப்ளாக்மெயில் செய்பவனாகவோ, அவமதிப்பவனாகவோ, துன்புருத்துபவனாகவோ தெரியவில்லை! அவனிடம் சிறுப்பிள்ளைத்தனமான பிடிவாதம் மட்டும் இருந்தது,