“சத்யா, நான் தான். பஸ் கிளம்பிருச்சா?”
“கிளம்பிருச்சுங்க, வீட்டுக்கு போயிட்டு போன் செய்றேன்.”
“இல்லை பஸ் ஸ்டாண்ட்ல இருந்தே எனக்கு போன செய். உன் அண்ணா வரேன்னு சொல்லி இருக்கார்.”
“என் வீட்டுக்கு எப்படி போகணும்னு எனக்கு தெரியும்.”
“சத்யா!”
“சரி, சரி! அவனை பார்த்துட்டு போன் செய்றேன், போதுமா?”
“குட்! இரண்டு பேரும் பத்திரமா இருங்க.”
“நாங்க இருக்குறது இருக்கட்டும், நீங்க பத்திரமா இருங்க.”
“ம்ம்ம் சரி! அப்புறமா பேசுறேன், கவனமா இரு!”
தென்றல்வாணன் போனை பாக்கெட்டினுள் வைக்க,
“டேய் சிஸ்டர் கூட பேசவா அலாரம் செட் செய்து வச்சிருந்த? நீ எமகாதகன்டா! நானெல்லாம் மறந்துட்டு திட்டு வாங்குவேன்,” என நண்பனை பாராட்டினான் வினோதன்.
“நானும் அதெல்லாம் வாங்கி இருக்கேன், அதோட எபக்ட் தான் இந்த அலாரம்!”
“நல்ல ஐடியாவா இருக்கு, நானும் காபி அடிக்குறேன்.”
“அடிச்சுக்கோ!”