ராதிகா பரிமாற, ஷிவா, அருந்ததி, லக்ஷ்மி, நாதன், பிரேமா, கண்ணன் அனைவரும் கதை பேசியபடி உணவு உண்டனர்.
அப்போதென்று இல்லாமல் அதன் பின் வந்த பல மணி நேரங்களும் கூட ராதிகாவுடனே செலவிட்டாள் அருந்ததி.
சிறு வயதில் ஷிவா செய்த லூட்டிகள், அவன் வாங்கிய பரிசுகள் என்று ராதிகா சொல்லிக் கொண்டே போக, நேரம் போனதே தெரியாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள் அருந்ததி.
“அருந்ததி, நாங்க கிளம்பட்டுமா?”
பிரேமா கிளம்ப தயாராகி வந்து கேட்டப் போது, இனி எப்போது சித்தியை பார்ப்பது என பெண்ணுக்கே உரிய தாய் வீட்டு பாசத்தில் அருந்ததியின் மனம் துணுக்குற்றது. ஆனாலும் பாதுகாப்பான இடத்தில் வந்து சேர்ந்து இருக்கிறோம் என அவளின் மனதினுள் திருப்தியும் இருக்கவே செய்தது!
“அருந்ததி நீ போய் ஷிவாவை வர சொல்லு!” என்று ராதிகா சொல்லவும்,
“நானா?” என்று தயக்கத்துடன் நின்றாள் அருந்ததி.
“அப்புறம் வேற யாரு போவா? சீக்கிரம் போயிட்டு வா!”
ராதிகா விரட்டவும், தயக்கத்துடன் மாடி அறைக்கு சென்ற அருந்ததி, அங்கே லேப்டாப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருத்த கணவனிடம்,
“சித்தி, சித்தப்பா கிளம்புறாங்க, நீங்க கீழே வரீங்களா?” என்றாள்.
அவளை ஆராய்வது போல் ஒரு பார்வை பார்த்த ஷிவா,
“வரேன் ரதி! அதுக்கு முன் ஒரு கேள்வி. என் மேல உனக்கு கோபமா?” எனக் கேட்டான்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.