எழில் அவருடைய பள்ளிக் கால தோழனிடம் பேசி அவர்கள் மூவரும் தங்க ஒரு வீடை ஏற்பாடு செய்திருந்தார்...
அதனால் ஹோட்டலில் தங்கும் அவசியம் இல்லாமல் நேராக அந்த வீட்டிற்கே மூவரும் சென்றார்கள்...
அங்கு சென்ற உடனேயே, குளித்து உடை மாற்றிக் கிளம்பினான் அரவிந்த்... பாரதி, எழில் இருவருமே அவனை தடுக்கவில்லை!
“புது ஊரு, பத்திரம் அரவிந்த்,” என்று மட்டும் சொன்னார் எழில். பாரதி அதையும் சொல்லவில்லை.
ஸாரா கொடுத்த அட்ரஸை கண்டுப்பிடிப்பது அரவிந்திற்கு கடினமாக இல்லை... ஒரு உபெர் பிடித்து அந்த அட்ரஸ் இருந்த இடத்தை அடைந்தான். ஆனால் அவன் சென்ற அட்ரஸில் தனி வீடு இல்லை... மாறாக பல அடுக்கு ஃபிளாட் ஒன்று தான் இருந்தது...
சாந்தி வளர்ந்த வீடு தனி வீடு என்பது அரவிந்திற்கு தெரியும்... அந்த இடத்தில இப்போது ஃபிளாட் இருக்கிறது என்றால்... அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என அவனுக்கு யோசனையாக இருந்தது...
ஒரு வேளை சாந்தியின் குடும்பம் வீட்டை விற்று இருப்பார்களோ???
அவன் யோசித்துக் கொண்டு நின்ற நேரத்தில் ஃபிளாட் கேட் வழியாக வெளியே இருந்த சாலையை எதற்காகவோ எட்டிப் பார்த்தான் அங்கே இருந்த செக்யூரிட்டி.
அரவிந்த் அவன் உள்ளே சென்று விடும் முன் ஓடிச் சென்றான்.
“ஹலோ, என் பேர் அரவிந்த், நான் லண்டன்ல இருந்து வரேன். இந்த அட்ரஸ் என்னோட ஃபிரென்ட் ஒருத்தங்க கொடுத்தாங்க. இங்கே வந்து பார்த்தா ஃபிளாட்டா இருக்கு. இங்கே முன்னாடி இருந்த ஃபேமிலி பத்தி உங்களுக்கு தெரியுமா??”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.