ரம்யா நீர் கொண்டு வந்து கொடுக்க, அதை ஒரே மடக்கில் குடித்து முடித்த அரவிந்த், எதிரே நின்ற இரண்டு பெண்களையும் பார்த்தான்...
ரம்யா அவனை பாவம் என்பது போல பார்க்க, அந்த பெண்மணி... சாந்தியின் சித்தியாக இருக்க வேண்டும்... இன்னும் என்ன என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்....
என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் திரும்பி நடந்தான் அரவிந்த்....
“சாந்தி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாப்பா...” என சற்று முன் கேட்டதும்,
“எனக்கு உங்களை விட வேற எதுவும் முக்கியமில்லை அரவிந்த்” என சாந்தி சில வருடங்களுக்கு முன் சொன்னதும் மாறி, மாறி, மீண்டும், மீண்டும் அவன் மனதில் ஒலித்து அவனை பைத்தியமாக்கியது...
இப்படி ஒரு செய்தியை அவன் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை!
எப்படியோ ஒரு ஆட்டோ பிடித்து அவர்கள் தங்கி இருந்த வீடு வந்து சேர்ந்தான்....
அங்கே பாரதி டேப்’ல் பிரவுஸ் செய்துக் கொண்டிருந்தாள்....
யோசிக்காமல், நேராக சென்று அம்மாவின் மடியில் முகம் புதைத்தவன்... கதறி அழுதான்... அழுதுக் கொண்டே இருந்தான்...
பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை....
“அரவிந்த்... என்ன ஆச்சு??? சாந்தியை பார்த்தீயா??? என்ன ஆச்சு? அவ என்ன சொன்னா??”
பாரதி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக... அரவிந்த் பதில் சொல்லாமலே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.