தொடர்கதை - மானசா தீவு – 02 - விஜேஜி
அங்கிருந்து, அவளை அழைத்துக் கொண்டு வந்தவன் ஒரு போட்டில் கூட்டி வந்தது ஒரு தீவிற்கு.. அவளால் நம்ப முடியவில்லை இவன் யார் என்னவென்று கூட தெரியாது இவனோடு அதுவும் ஒரு அத்வான தீவில் கூட்டிக் கொண்டு வந்து விட்டானே என்று பயந்தாள். அந்த தீவு கொச்சிக்கும், எர்ணாகுளத்திற்கும் இடையே இருந்தது. அவள் பயந்து போய், "ஐயோ, என்னை எங்கே கூட்டிக் கொண்டு வந்திருக்கேள், எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்ன எங்க வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போயிடுங்கோ ப்ளீஸ்? உங்க காலிலே விழறேன் ப்ளீஸ்?" என்று அழுதாள்.
"நீ எண்ட பார்யா, ஞான் நிண்ட பர்தா, இனி என்ன விட்டு நீ எங்கேயும் போக கூடாது கேட்டியா? இனி, உன் லைஃப் என்னோடுதான், அதனால பேசாம இரு."
அவள் அழுதுக் கொண்டே இருந்தாள். ஆமாம், அவன்தான் ஒரு முழம் மஞ்சள் கயிற்றை தன் கழுத்தில் கட்டி தன்னை மனைவி என்ற பெயரில் அடிமையாக்கிக் கொண்டான், இப்போது என்ன செய்ய எப்படி தப்பி போவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள், உள்ளே நுழைந்தவுடன், அதை வீடு என்று சொல்லக் கூடாது, அது ஒரு மாளிகை என்றுதான் சொல்லவேண்டும், அவ்வளவு பெரியது, அழகாகவும் இருந்தது .... எதுவானால் என்ன எனக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று நினைத்துக் கொண்டாள் மானசா.
'எனக்கு எண்ட அம்மே அச்சன் வேணும், என்ன எங்க வீட்ல விட்டுடு! "என்று அழுதாள்.
"நீ என்ன சின்ன குட்டியா, நான் என்னவோ ஒன்ன கிட்நாப் செய்து வந்த மாதிரி கரையற? நான் உன்ன விவாஹம் கழிச்சு வந்திருக்கேன், நீ இனிமே என்னோட தான் இருக்கணும்"
'எனக்கு ஒன்ன பிடிக்கல, என்னால ஒன்னோட இருக்க முடியாது ... என்ன எங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடு"
"ஒன்ன திரும்பி அனுப்பவா விவாஹம் கழிச்சு கூட்டிட்டு வந்தேன், உன்னோட வாழத்தான் உன்ன கூட்டிட்டு வந்தேன்."