தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 17 - தேன்மொழி
கேஸ் ஃபைல் – 03 – தர்மமென்பார் நீதியென்பார்... !
“விசாரணைக்கு அவசியம் என்பதால் இந்த வழக்கு பற்றி இப்போதைக்கு மத்த விபரங்கள் பகிர்ந்துக்க முடியலை... கோர்ட்ல கேஸ் வரும் போது உங்களுக்கே தெரியும்...”
தென்றல்வாணன் தன் பேட்டி டிவியில் ஒளிபரப்பாவதை மனைவியின் அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என் மாப்பிளை தான் கேஸை முடிச்சார். ஒரே வாரத்துல முடிச்சிட்டார் பார்த்தீயா... பெரிய வி.ஐ.பி கேஸ்...” சத்யாவின் அம்மா குமுதா யாரிடமோ பெருமை பீற்றுவது காதில் விழுந்தது.
“என்னங்க... உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்...”
கொஞ்சல் + கெஞ்சலாக கேட்ட மனைவியை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தவன்,
“ஏதோ பெரிய விஷயம்னு சொல்லு...” என்றான்.
“எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?”
“மத்தபடி நீ ஆர்டர்ல போடுவ! இப்படி எல்லாம் கெஞ்ச மாட்டீயே...!”
“ஆமாம், நீங்க மட்டும் எப்போவும் ஆர்டர் போடாம கோரிக்கை வைக்குறீங்க! இப்போவும் நான் என்ன சொன்னேன்? ஒரு விஷயம் சொல்லனும்னு தானே சொன்னேன்...”
கடுப்புடன் சொன்ன மனைவியை சமாதானப் படுத்தும் எண்ணத்துடன் ஸ்ருதியை இறக்கினான் தேன்.
“சரி, சரி, என்னன்னு சொல்லு, சத்யா!”
“அப்பாக்கு இந்த ஊரு வெயில் ஒத்துக்கலையாம்,,, டாக்டர் ஒன்னு இரண்டு மாசம் நல்ல