ஹில் ஸ்டேஷன் மாதிரி போக சொல்லி இருக்காராம்...”
தென்றல்வாணன் சந்தேகத்துடன் சத்யாவைப் பார்த்தான்.
“அதனால நீ அவரை நம்ம வீட்டுக்கு வர சொல்லி சொல்லிட்ட அவ்வளவு தானே?”
“ஆமாம்ங்க... மதியூர் மாதிரி கிளைமேட் வேற எங்கே இருக்கு?”
“மாமா வருவதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை சத்யா...”
“வந்து... வந்து ... அப்பா மட்டுமில்லை... அம்மாவும் வராங்க...”
“என்னது!!!!” பேயைக் கண்டவனைப் போல அலறினான் தேன்.
“அம்மாவை மட்டும் எப்படி நான் இங்கேயே இருங்கன்னு சொல்றது...?”
தேன் சத்யாவை ஒரு முறை முறைத்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்றான். அவனின் மாமனார் விஜயநாதன் பேப்பரும் கையுமாக வெராண்டாவில் இருந்தார். அவர் பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தான் தேன்.
"எப்படி இருக்கீங்க மாமா? மருந்தெல்லாம் கரக்ட்டா சாப்பிடுறீங்களா?"
அவனை அப்பாவியாக இருக்கிறாயே என்பது போல பார்த்தார் அவர்!
“எனக்கு உண்மையில உடம்புக்கு ஒன்னுமில்லை மாப்பிள்ளை...”
தென்றல்வாணன் ஆமோதித்து தலையை ஆட்டினான்.
“நினைச்சேன்...! இது உங்க மகன் செய்த ப்ளான்னு புரியுது மாமா...”
“பாவம் மாப்பிளை அவனும் எவ்வளவு நாள் தான் அம்மாக்கும் மனைவிக்கும் நடுவில