(Reading time: 8 - 15 minutes)
Inspector Then
Inspector Then

  

ந்த கேசுல கொலை செய்தது அவங்க இல்லை...” என்றான் தேன் கடுப்புடன்.

  

“ஹாங்! அப்படி தான் சொல்வீங்க! அதைக் கண்டுபிடிக்க வேற இவ்வளவு நாள்... என் கிட்ட கேஸை கொடுத்திருந்தா ஒரே நாளிலேயே முடிச்சிருப்பேன்... பரவாயில்லை அடுத்த கேஸ் வந்த உடனே என் கிட்ட சொல்லுங்க, நான் உங்களுக்கு ஹெல்ப் செய்றேன்...”

  

“ம்ம்ம்...” என்றபடி அருகே சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து முறைத்த தேன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

  

“மாமியார் கொடுமைனா என்னன்னு எனக்கு இப்போ தான் புரியுது...!” என்றான்.

  

“நீங்க தானே ஆசைப்பட்டீங்க! என்ஜாய், என்ஜாய்!” என்றாள் சத்யா அவனைப் போலவே ரகசியக் குரலில்.

 

அந்த நேரத்தில் தென்றல்வாணனின் மொபைல் போன் ஒலிக்கவும், தன்னை காப்பாற்றிய போனுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது தென்றல்வாணனுக்கு!

 

அழைப்பவர் டிஎஸ்பி என்ற விபரம் தெரிந்ததும் போனுடன் தனியாக வந்து பேசினான்.

 

“சார்?

 

“தேன், நீ லீவுல இருக்குறது தெரியும். ஒரு க்ரிட்டிகல் & சென்சிட்டிவ் கேஸ் ஓபன் ஆகி இருக்கு. ஒரு பதினெட்டு வயசு பொண்ணு சம்மந்தப்பட்ட கேஸ். நீ பார்த்தா சரியா இருக்கும்னு எனக்கு தோணுது.”

 

“ஓபன் ஆகி இருக்குன்னா சொன்னீங்க சார்?

 

“எஸ் தேன். இது பழைய கேஸ். நீ மதியூர் வரதுக்கு முன்னாடி வந்த கேஸ். இப்போ சென்னை போலீஸ்ல இருந்து சக்தி நம்ம கிட்ட பழைய கேஸ் பத்தி கான்டாக்ட் செய்திருக்காங்க. பை தி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.